மேலும் அறிய

India Corona Spike: மீண்டும் எகிறிய கொரோனா.. ஒரே நாளில் 10 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு...! 38 பேர் உயிரிழப்பு...!

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

India Corona Spike:  இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்து நிலையில், மீண்டும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 10,542 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

கேரளாவில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தேசிய தலைநகரான டெல்லியில் மருத்துவமனைகள், கிளினிக் மற்றும் மருந்தகங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்து நிலையில், மீண்டும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 10,542-ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 61,233லிருந்து 63,562-ஆக அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,48,34,859 லிருந்து 4,48,45,401-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 4.39 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானர்களின் வார விகிதம் 5.1 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.48 கோடியாக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 8,175 பேர் கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4.42 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

38 பேர் உயிரிழப்பு

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 190ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதில்  மகாராஷ்ராவில் 6 பேரும், டெல்லியில் 5 பேரும், சத்தீஸ்கரில் 4 பேரும், கர்நாடகாவில் 3 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும், கேரளாவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலத்தில் தலா ஒரு உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. கடந்த 24 நேரத்தில் 1.79 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, 220.66 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க

Karnataka Election: கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டி: வேட்பாளரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!
பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு!
"சும்மா விட மாட்டோம்" பயங்கரவாதிகளுக்கு எதிராக சூளுரைத்த ராஜ்நாத் சிங்
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடுAshmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs JyotikaAnnamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!
பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு!
"சும்மா விட மாட்டோம்" பயங்கரவாதிகளுக்கு எதிராக சூளுரைத்த ராஜ்நாத் சிங்
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?
'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?
Watch Video: மணமாகி 6 நாட்களில் மரணம்; கண்ணீருடன் கணவருக்கு இறுதிவிடை- கதறிய இளம் மனைவி!
Watch Video: மணமாகி 6 நாட்களில் மரணம்; கண்ணீருடன் கணவருக்கு இறுதிவிடை- கதறிய இளம் மனைவி!
HC on Ponmudi: இழிவான பேச்சு.. அமைச்சர் பொன்முடியை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்..
இழிவான பேச்சு.. அமைச்சர் பொன்முடியை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்..
20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: இரவு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: இரவு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
Embed widget