Nitin Gadkari: பழைய திட்டம் வர்க்-அவுட் ஆகாது - காற்றில் ஓடும் பேருந்து? 150 பேர் பயணிக்கலாம் - நிதின் கட்கரி தந்த அப்டேட்
Nitin Gadkari AirBus: காற்றில் ஓடும் பேருந்து சேவையை தொடங்க முன்வர வேண்டும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

Nitin Gadkari AirBus: நகர்ப்புறங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இனி பழைய திட்டங்கள் பலன் அளிக்காது என நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
பழைய திட்டங்கள் பலனளிக்காது - நிதின் கட்கரி
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கிராபிக் எரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர், டேராடூனில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க ஒரு புதுமையான போக்குவரத்து தீர்வை முன்மொழிந்துள்ளார். நகர்ப்புற போக்குவரத்து சவால்களை சமாளிக்க பாரம்பரிய நடவடிக்கைகள் இனி போதுமானதாக இருக்காது. தரை மட்டத்திற்கு மேல் இயங்கும் இரட்டை அடுக்கு பேருந்து அமைப்பைத் தொடங்க விரும்புவதாக வலியுறுத்தினார். இதில் ஒரே நேரத்தில் 125 முதல் 150 பேர் பயணம் செய்வார்கள் என்றார்.
முன்மொழிவை அனுப்ப வலியுறுத்தல்
ஏர் பஸ் திட்டத்திற்கான விரிவான திட்டத்தை உத்தரகண்ட் மாநில அரசு முன்மொழிய வேண்டும் என்றும், சமர்ப்பிக்கப்பட்டவுடன், மத்திய அரசு முழு உதவியையும் வழங்கும் என்றும் நிதின் கட்கரி உறுதியளித்தார். சாலை மற்றும் ஹெலிகாப்டர் வழியாக டேராடூனின் போக்குவரத்தைப் பற்றிய சோதனைகள், புதுமையான உள்கட்டமைப்பு திட்டமிடலுக்கான அவசரத் தேவையைக் குறிப்பதாக குறிப்பிட்டார். அதேநேரம், இந்த திட்டம் எப்படி செயல்படும், என்ன மாதிரியான தொழில்நுட்பத்தில் முன்னெடுக்கப்படும் என்பது குறித்து விரிவான தகவல்கள் எதையும் அவர் குறிப்பிடவில்லை.
"To reduce traffic in Dehradun, I want to start a Double Decker Bus that will RUN ON AIR. 125-150 people will travel on air.
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) June 3, 2025
~ CM should send a proposal. Everything is Possible."
: Nitin J Gadkari, at Convocation in @GraphicEraUni. Great Vision 👏🏼 pic.twitter.com/F5y9Q9Cx2J
கல்வியின் முக்கியத்துவம்
போக்குவரத்து மேலாண்மைக்கு அப்பால், இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மையின் பரந்த பங்கையும் கட்கரி வலியுறுத்தினார். மதிப்பு அடிப்படையிலான கல்வியை ஊக்குவிக்க கல்வி நிறுவனங்களை வலியுறுத்தினார், மேலும் கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்கும் முயற்சிகளின் திறனை, குறிப்பாக பசுமை ஹைட்ரஜன் எரிபொருளின் உற்பத்தியை எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த, மின்சார மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட தூய்மையான போக்குவரத்து விருப்பங்களை நோக்கி மாறுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.





















