மேலும் அறிய

India Pakistan Partition: இந்தியா - பாகிஸ்தான் பிரிந்து தான் சுதந்திரம் அடைந்திருக்க்க வேண்டுமா?.வரலாற்றாளர்களின் பார்வை...

India Pakistan Partition: இந்தியா- பாகிஸ்தான் தேசத்தை பிரித்து தான் விடுதலை அடைந்திருக்க முடியுமா என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக பிரிந்தன. இந்திய விடுதலை அடைவதற்கு முன்னர், தேசம் ஏன் இரண்டாக துண்டாடப்பட்டன என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

சமூக பழக்க வழக்கங்கள்:

வரலாற்று வல்லுநரான இசட்.எச்.ஸைதே பிரிவினை குறித்து தெரிவிக்கும் போது, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையானது தவிர்க்க முடியாதது, அதற்கு காரணம் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களின் சமூக பழக்கங்களின் வேறுபாடுகள்தான். அதை உறுதி செய்யும் விதமாக தான் 1906 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் என இஸ்லாமிய சமூகத்துக்கான இயக்கம் அமைக்கப்பட்டது.பின்னர் ஆங்கிலேயர் திட்டமிட்டு கொண்டு வந்த மின்டோ மார்லி சீர்திருத்தம் 1909, மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் 1919 ஆகியவை இஸ்லாமியர்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கு வழிவகுத்தன. இந்திய விடுதலையடைந்தால், இந்து மதத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் என அச்ச உணர்வு இஸ்லாமிய தலைவர்களுக்கு ஏற்பட்டதாகவும், அந்த தவிர்க்க முடியாத விளைவே தேசப் பிரிவினையாகும் என வரலாற்று நிபுணர் இசட்.எச்.ஸைதே குறிப்பிட்டுள்ளார்.

புவியியல் அரசியல்:

பிரிவினைக்கு முக்கிய காரணமாக முஸ்லிம் லீக் அமைக்கப்பட்டதால் என்று மட்டும் என்று சொல்லிவிட முடியாது என ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா தெரிவித்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணம் புவியியல் அரசியலே என்று எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா தெரிவித்தார். அதாவது, இந்தியாவின் சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்தனர். அப்படிப்பட்ட சாத்தியக்கூறுகளை, ஆங்கிலேயர்கள் தூண்டி விட்டதாலும்,முஸ்லிம் லீக் இயக்கம் பயன்படுத்திக் கொண்டதாகவும் எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா தெரிவித்தார்.

”காந்தி போராடியிருக்க வேண்டும்”


India Pakistan Partition: இந்தியா - பாகிஸ்தான் பிரிந்து தான் சுதந்திரம் அடைந்திருக்க்க வேண்டுமா?.வரலாற்றாளர்களின் பார்வை...

தேச பிரிவினையானது, தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று என சங்கதர் தெரிவித்தார். தேச பிரிவினை அறிவிப்பின் போது, காந்தி அதை எதிர்த்து போராடி இருக்க வேண்டும் எனவும், சத்தியாகிரகத்தை தொடங்கி இருக்க வேண்டும் எனவும் சங்கச்தர் தெரிவித்தார்.காந்தி மட்டும் தீவிரமான போராட்டத்தை தொடங்கி இருந்தால், பிரிவினை வாதத்தை தவிர்த்திருக்க முடியும் என சங்கதர் தெரிவித்தார்.

மௌன்ட் பேட்டன் தான் காரணம்:

India Pakistan Partition: இந்தியா - பாகிஸ்தான் பிரிந்து தான் சுதந்திரம் அடைந்திருக்க்க வேண்டுமா?.வரலாற்றாளர்களின் பார்வை...

இந்தியா பிரிவினையை கடைசி வரை எதிர்த்தவரும், இந்திய தேசிய காங்கிரசின் தலைவரும், நாட்டின் முதல் கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத் தெரிவித்ததாவது, பிரிவினைக்கு முக்கிய காரணம் மௌண்ட் பேட்டனே என தெரிவித்தார். முஸ்லிம் இயக்கத்தின் எண்ண ஓட்டத்தை, சாதகமாக பயன்படுத்தி கொண்டு, நாட்டை  இரண்டு பாகமாக துண்டு போட்டு விட்டார். மேலும், தனது உடலை கூறு போட்ட பின்புதான், நாட்டை பிரிக்க முடியும் என தீர்க்கமாக இருந்த காந்தியை, தனது அரசியல் சாதுர்யத்தால் மௌண்ட் பேட்டன் பணிய வைத்து விட்டார் என ஆசாத் தெரிவித்தார்.   


India Pakistan Partition: இந்தியா - பாகிஸ்தான் பிரிந்து தான் சுதந்திரம் அடைந்திருக்க்க வேண்டுமா?.வரலாற்றாளர்களின் பார்வை... 

ஊகங்களுக்கு இடமில்லை:

இது போன்று பல்வேறு தரப்பினரும், பல்வேறு வகையிலான விளக்கங்களை அளிக்கலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகளை , இப்படி  செய்திருந்தால் பிரிவினையை தவிர்த்திருக்கலாம் என கூறுவது ஊகாமாக இருக்கலாமேயன்றி உண்மையாகாது. ஏனென்றால் வரலாற்றில் ஊகங்களுக்கு இடமில்லை. ஆனால் நாட்டின் பிரிவினையானது,  பெரும்பாலான தலைவர்களுக்கு  தீராத வடுவாகவே அமைந்தது.                              

Also Read: Why august 15: ஆகஸ்ட் 15-ஐ சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சுதந்திர நள்ளிரவில் நேரு பேசியது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Embed widget