மேலும் அறிய

India Pakistan Partition: இந்தியா - பாகிஸ்தான் பிரிந்து தான் சுதந்திரம் அடைந்திருக்க்க வேண்டுமா?.வரலாற்றாளர்களின் பார்வை...

India Pakistan Partition: இந்தியா- பாகிஸ்தான் தேசத்தை பிரித்து தான் விடுதலை அடைந்திருக்க முடியுமா என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக பிரிந்தன. இந்திய விடுதலை அடைவதற்கு முன்னர், தேசம் ஏன் இரண்டாக துண்டாடப்பட்டன என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

சமூக பழக்க வழக்கங்கள்:

வரலாற்று வல்லுநரான இசட்.எச்.ஸைதே பிரிவினை குறித்து தெரிவிக்கும் போது, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையானது தவிர்க்க முடியாதது, அதற்கு காரணம் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களின் சமூக பழக்கங்களின் வேறுபாடுகள்தான். அதை உறுதி செய்யும் விதமாக தான் 1906 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் என இஸ்லாமிய சமூகத்துக்கான இயக்கம் அமைக்கப்பட்டது.பின்னர் ஆங்கிலேயர் திட்டமிட்டு கொண்டு வந்த மின்டோ மார்லி சீர்திருத்தம் 1909, மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் 1919 ஆகியவை இஸ்லாமியர்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கு வழிவகுத்தன. இந்திய விடுதலையடைந்தால், இந்து மதத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் என அச்ச உணர்வு இஸ்லாமிய தலைவர்களுக்கு ஏற்பட்டதாகவும், அந்த தவிர்க்க முடியாத விளைவே தேசப் பிரிவினையாகும் என வரலாற்று நிபுணர் இசட்.எச்.ஸைதே குறிப்பிட்டுள்ளார்.

புவியியல் அரசியல்:

பிரிவினைக்கு முக்கிய காரணமாக முஸ்லிம் லீக் அமைக்கப்பட்டதால் என்று மட்டும் என்று சொல்லிவிட முடியாது என ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா தெரிவித்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணம் புவியியல் அரசியலே என்று எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா தெரிவித்தார். அதாவது, இந்தியாவின் சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்தனர். அப்படிப்பட்ட சாத்தியக்கூறுகளை, ஆங்கிலேயர்கள் தூண்டி விட்டதாலும்,முஸ்லிம் லீக் இயக்கம் பயன்படுத்திக் கொண்டதாகவும் எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா தெரிவித்தார்.

”காந்தி போராடியிருக்க வேண்டும்”


India Pakistan Partition: இந்தியா - பாகிஸ்தான் பிரிந்து தான் சுதந்திரம் அடைந்திருக்க்க வேண்டுமா?.வரலாற்றாளர்களின் பார்வை...

தேச பிரிவினையானது, தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று என சங்கதர் தெரிவித்தார். தேச பிரிவினை அறிவிப்பின் போது, காந்தி அதை எதிர்த்து போராடி இருக்க வேண்டும் எனவும், சத்தியாகிரகத்தை தொடங்கி இருக்க வேண்டும் எனவும் சங்கச்தர் தெரிவித்தார்.காந்தி மட்டும் தீவிரமான போராட்டத்தை தொடங்கி இருந்தால், பிரிவினை வாதத்தை தவிர்த்திருக்க முடியும் என சங்கதர் தெரிவித்தார்.

மௌன்ட் பேட்டன் தான் காரணம்:

India Pakistan Partition: இந்தியா - பாகிஸ்தான் பிரிந்து தான் சுதந்திரம் அடைந்திருக்க்க வேண்டுமா?.வரலாற்றாளர்களின் பார்வை...

இந்தியா பிரிவினையை கடைசி வரை எதிர்த்தவரும், இந்திய தேசிய காங்கிரசின் தலைவரும், நாட்டின் முதல் கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத் தெரிவித்ததாவது, பிரிவினைக்கு முக்கிய காரணம் மௌண்ட் பேட்டனே என தெரிவித்தார். முஸ்லிம் இயக்கத்தின் எண்ண ஓட்டத்தை, சாதகமாக பயன்படுத்தி கொண்டு, நாட்டை  இரண்டு பாகமாக துண்டு போட்டு விட்டார். மேலும், தனது உடலை கூறு போட்ட பின்புதான், நாட்டை பிரிக்க முடியும் என தீர்க்கமாக இருந்த காந்தியை, தனது அரசியல் சாதுர்யத்தால் மௌண்ட் பேட்டன் பணிய வைத்து விட்டார் என ஆசாத் தெரிவித்தார்.   


India Pakistan Partition: இந்தியா - பாகிஸ்தான் பிரிந்து தான் சுதந்திரம் அடைந்திருக்க்க வேண்டுமா?.வரலாற்றாளர்களின் பார்வை... 

ஊகங்களுக்கு இடமில்லை:

இது போன்று பல்வேறு தரப்பினரும், பல்வேறு வகையிலான விளக்கங்களை அளிக்கலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகளை , இப்படி  செய்திருந்தால் பிரிவினையை தவிர்த்திருக்கலாம் என கூறுவது ஊகாமாக இருக்கலாமேயன்றி உண்மையாகாது. ஏனென்றால் வரலாற்றில் ஊகங்களுக்கு இடமில்லை. ஆனால் நாட்டின் பிரிவினையானது,  பெரும்பாலான தலைவர்களுக்கு  தீராத வடுவாகவே அமைந்தது.                              

Also Read: Why august 15: ஆகஸ்ட் 15-ஐ சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சுதந்திர நள்ளிரவில் நேரு பேசியது என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget