மேலும் அறிய

Indian Railways | கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரயில்வே துறைக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

கொரோனா காலத்தில் ரயில்வே துறைக்கு தட்கல், ப்ரிமியம் தட்கல் மற்றும் டைனாமிக் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாயின் முழு விவரம் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து சேவையான ரயில்வே போக்குவரத்து சேவையும், அதன் வருவாயும் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ஆர்.டி.ஐ.யில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

அவரது கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சகம், 2020-21ம் நிதியாண்டில் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 403 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ப்ரிமியம் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 119 கோடி கிடைத்துள்ளது. டைனாமிக் டிக்கெட் ரூபாய் 511 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.


Indian Railways | கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரயில்வே துறைக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

கடந்த செப்டம்பர் வரையிலான 2021-22ம் ஆண்டிற்கான நிதியாண்டில், டைனாமிக் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 240 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 353 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ப்ரிமியம் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா காலத்திற்கு முந்தை வருவாயுடன் ஒப்பிடும்போது, ரயில்வே துறை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

2019-20-ஆம் நிதியாண்டில் ரயில்வே சேவைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இதனால், அப்போது, டைனாமிக் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 1,313 கோடியும், தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 1,669 கோடியும், பிரிமியம் தட்கல் டிக்கெட் விற்பனை மூலமாக ரூபாய் 603 கோடியும் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்தது. கொரோனா காலத்தில் கிடைத்த வருவாயை இதனுடன் ஒப்பிடும்போது ரயில்வே துறை எந்தளவு இழப்பைச் சந்தித்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.


Indian Railways | கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரயில்வே துறைக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

இது மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டில் புதிய ரயில் சேவைகளும் தொடங்கப்படவில்லை. 2016-2017ம் ஆண்டில் 223 ரயில்களின் சேவைகளும், 2017-2018ம் ஆண்டில் 170 ரயில்களின் சேவைகளும், 2018-2019ம் நிதியாண்டில் 266 ரயில் சேவைகளும், 2019-2020ம் நிதியாண்டில் 144 ரயில் சேவைகளும் நாட்டில் புதியதாக தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அளவில் வருவாயை ஈட்டித் தருவதில் ரயில்வே துறைகளின் சேவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காரணமாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது

மேலும் படிக்க : Watch Video: 'மால டும் டும்'க்கு முன்பாக முத்தம் கேட்ட மணமகன்-வைரல் வீடியோ !

மேலும் படிக்க : எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை: 22 பேர் உயிரை பறித்த ஓட்டுநர்.. 190 ஆண்டுகள் சிறை தண்டனை!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget