மேலும் அறிய

Watch Video: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட இந்தியா விமானப்படை ஹெலிகாப்டர்-வைரல் வீடியோ !

வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக உத்தராகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உத்தராகாண்ட் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிலிபிட் பகுதியில் வெள்ளத்தில் தவித்து கொண்டிருந்த 21 பேரை இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மீட்டுள்ளது. அந்தப் பகுதியில் வெள்ளத்தின் நடுவே தத்தளித்து கொண்டிருந்த 6 குழந்தைகள், 12 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 21 பேரை இந்திய விமானப்படை மீட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது அந்த வீடியோவை பலரும் பார்த்து விமானப்படையின் செயலை பாராட்டி வருகின்றனர். 

 

அதேபோல் நேற்று உத்தராகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்க இந்திய விமானப்படை சார்பில் 3 துருவ் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. அந்த ஹெலிகாப்டர்களின் உதவியுடன் 3 கிராமங்களில் சுமார் 25 பேரை விமானப்படை மீட்டு பத்திரமான இடத்திற்கு மாற்றியது. மேலும் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. 

 

இதற்கிடையே உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அத்துடன் உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீட்பு பணிகளை உடனடியாக முடக்கி விடவும் அவர் உத்தரவிட்டார். 

மேலும் படிக்க: 3 கிமீ தூரம்.. 3 நிமிடம்.. உயிரை காப்பாற்றிய போலீசாரின் அதிவேக நடவடிக்கை!! திக் திக் மொமெண்ட்ஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget