மேலும் அறிய

நெருங்கும் தேர்தல்.. காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

புல்வாமா தாக்குதலை போன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இந்திய விமான படையை சேர்ந்த 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். 

பாதுகாப்பு படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியல் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வாக்குப்பதிவு நடக்குல் இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலும் 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், இந்திய விமான படையின் வாகனம் உள்பட இரண்டு வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. அதோடு, இந்திய விமான படையை சேர்ந்த 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன?

சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டாக அங்கு பல பயங்கவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், பூஞ்ச் பகுதியில் இந்தாண்டு நடத்தப்பட்ட முதல் பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

ராணுவ வாகனத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அந்த பகுதியை உள்ளூர் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஷாசிதார் அருகே உள்ள விமான தளத்திற்குள் தாக்குதலுக்கு உள்ளான வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்" என்றார்.

இந்திய விமான படை தளத்திற்கு செல்லும்போது பாதுகாப்பு கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியின் கீழ் பூஞ்ச் மாவட்டம் வருகிறது. வரும் 25ஆம் தேதி, இந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

2019ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிபர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த தாக்குதல் நடந்த 12 நாள்களில், 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 26ஆம் தேதி, அதிகாலை பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட்டில் இந்தியா வான்படை தாக்குதலை மேற்கொண்டது. 

 

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget