மேலும் அறிய

நெருங்கும் தேர்தல்.. காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

புல்வாமா தாக்குதலை போன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இந்திய விமான படையை சேர்ந்த 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். 

பாதுகாப்பு படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியல் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வாக்குப்பதிவு நடக்குல் இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலும் 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், இந்திய விமான படையின் வாகனம் உள்பட இரண்டு வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. அதோடு, இந்திய விமான படையை சேர்ந்த 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன?

சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டாக அங்கு பல பயங்கவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், பூஞ்ச் பகுதியில் இந்தாண்டு நடத்தப்பட்ட முதல் பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

ராணுவ வாகனத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அந்த பகுதியை உள்ளூர் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஷாசிதார் அருகே உள்ள விமான தளத்திற்குள் தாக்குதலுக்கு உள்ளான வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்" என்றார்.

இந்திய விமான படை தளத்திற்கு செல்லும்போது பாதுகாப்பு கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியின் கீழ் பூஞ்ச் மாவட்டம் வருகிறது. வரும் 25ஆம் தேதி, இந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

2019ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிபர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த தாக்குதல் நடந்த 12 நாள்களில், 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 26ஆம் தேதி, அதிகாலை பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட்டில் இந்தியா வான்படை தாக்குதலை மேற்கொண்டது. 

 

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
Cooking Gas Available : வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
Embed widget