மேலும் அறிய

படிப்பறிவு இல்லாதவர்களால் இந்தியாவுக்கு சுமை - உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

”பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளால் எங்களுக்கு வாக்களித்தவர்கள் கூட பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அனைத்தையும் நாட்டின் நலன் கருதி...”

படிப்பறிவு இல்லாத மக்கள் இந்தியாவுக்கு சுமையாக இருந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பதவி ஏற்று 20 ஆண்டுகள் கழிந்துள்ளது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர் மோடியின் நண்பரும், பாஜக முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசினார். அப்போது அவர், நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கு பெரும் பங்கு ஆற்றி வருவதாக குறிப்பிட்டார். இது குறித்து நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் எந்த அளவு பங்காற்றி வருகிறோம் என்பது புரியும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, “இந்தியாவில் படிப்பு அறிவு இல்லாத மக்கள் நாட்டுக்கு பெரும் சுமையாக இருந்து வருகின்றனர். அவருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமை குறித்து கூட அறிவு இருப்பது இல்லை. அவரிடம் இருந்து நாடு எதிர்பார்க்கும் கடமைகளை அவர் அறிந்து வைத்திருப்பது கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரால் எப்படி நாட்டில் ஒரு நல்ல குடிமகனாக  இருக்க முடியும்.?” என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

படிப்பறிவு இல்லாதவர்களால் இந்தியாவுக்கு சுமை - உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக முதல் முறை பதவியேற்கும் போது மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இடை நிற்றல் இருந்து வந்ததாக அமித்ஷா நினைவுகூர்ந்தார். “பிரதமர் மோடி குஜராத்தில் அப்போது மாணவர் சேர்க்கையை திருவிழாவை போல நடத்திக் காட்டினார். 100% ஆக மாணவர் சேர்க்கையை மோடி உயர்த்தினார். பெற்றோர்களுக்கான கமிட்டியை அமைத்தார். மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் அவர்களை அழைத்து வருவது ஆசிரியர்களின் கடமையாக்கப்பட்டது. இதன் மூலம் 37 சதவீதமாக இருந்த இடைநிற்றலை மோடி 1% ஆக குறைத்தார்.” எனப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியை ஒரு ஜனநாயகத் தலைவர் என புகழாரம் சூட்டிய அமித்ஷா, தற்போதைய மோடி ஆட்சி காலத்தில் இருப்பதை போல், வேறு எந்த ஆட்சி காலத்திலும் மத்திய அமைச்சரவை ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்பதை அவரது விமர்சகர்களே ஒப்புக்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எதேச்சதிகாரம் மிக்க தலைவர் என்ற விமர்சனத்தை ஏற்க மறுத்த அமித்ஷா, அனைத்து விதமான நல்ல ஆலோசனைகளையும் செவி தாழ்த்தி கேட்கக்கூடியவர் என புகழ்ந்தார்.

“பிரதமர் மோடி எந்த துணிச்சலான நடவடிக்கையையும் எடுக்க தயங்கியது இல்லை. கருப்புப் பணத்தை மீட்கவும், பொருளாதாரத்தை சீர்திருத்தவும், வரி செலுத்தும் முறையில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளால் எங்களுக்கு வாக்களித்தவர்கள் கூட பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அனைத்தையும் நாட்டின் நலன் கருதி பிரதமர் செய்கிறார் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்து உள்ளார்.

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget