மேலும் அறிய
Advertisement
UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)
7 AM Headlines: 24 மணிநேரத்தில் நடந்தவை இதுதான்... காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது யார்? குழப்பத்தில் அதிமுக; திணறும் எதிர்க்கட்சிகள்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிப்பு - முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து
- ஈரோடு கிழக்கில் நாங்கள் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவது உறுதி என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் அமைக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யோசனை.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் போட்டியிட காங்கிரஸ் தலைமையே முடிவெடுத்ததாக அமைச்சர் முத்துசாமி தகவல்.
- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுவில் விவாதிக்க வேண்டியுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
- தீர்ப்புகள் அனைத்தும் இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- "மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மட்டும் தான் தாங்கள் பயின்ற கல்லூரியை பார்க்க முடியாமலேயே பட்டம் பெற்று வெளியேறுவார்கள்" - சு.வெங்கடேசன்
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
இந்தியா:
- அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து தான் இந்திய அரசாங்கம் தொடங்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
- அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயரிடப்படாமல் இருந்த 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்.
- மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பகத் சிங் கோஷியாரி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள்.
- சட்டசபையில் உரை; அரசு தயாரித்த உரையை வார்த்தை விடாமல் வாசித்த கேரள ஆளுநர்
- கோவா மாநில உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
- அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாதுகாப்பு நிலவரத்தை ஆராய்ந்தார்.
- ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் ,தச்சூர் வரை 126 கி.மீ ஆறு வழிச்சாலைக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
- மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கென தனி தேர்தல் வாக்குறுதிகள் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
உலகம்:
- சவுதி அரேபியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் தற்போது விசா இன்றி பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபை தங்களின் பணி ஆட்களில் 6 சதவிகிதம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
- கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்றி இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
- நேபாளத்தில் பொகாரா எனும் இடத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த ஐந்து இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
- 115 ஆண்டுகள் 322 நாள்கள் வாழ்ந்து வரும் மரியா பிரானியாஸ் மோரேரா என்ற பெண்மணி உலகின் வயதான பெண்மணி எனும் புதிய சாதனையை படைத்துள்ளார்.
விளையாட்டு:
- ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர்:தமிழ்நாடு-சவுராஷ்டிரா மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
- நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
- மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மேற்பார்வை கமிட்டியின் தலைவராக மேரிகோம் நியமனம்
- இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 ஆண்கள் அணியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தேர்தல் 2024
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion