மேலும் அறிய

Snake Man: 5,600 பாம்புகளை பிடித்த அதிசய மனிதர் ..10 முறை கடி பட்டும் அசால்ட் செய்யும் இரும்புகோட்டை முரட்டு சிங்கம்

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் 10 முறைக்கு மேல் கடிப்பட்டும் பாம்பை குழந்தை போல் கையாள்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாம்பை கண்டால் படையே அஞ்சும் என்பது பழமொழி. சிறிய பாம்பை பார்த்தாலும் பதறி ஓடும் பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் 10 முறைக்கு மேல் கடிப்பட்டும் பாம்பை குழந்தை போல் கையாள்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

5,600 பாம்புகளை பிடித்த அதிசய மனிதர்:

ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பவன் ஜோக்பால். 28 வயது இளைஞரான இவர், பட்டு கலாம் கிராமத்தில் வசித்து வருகிறார். பாம்பு பிடிக்கும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், "ஏறக்குறைய 10 ஆண்டுகலாக கிராமப்புறங்களிலும் பிற இடங்களிலும் உள்ள மக்களின் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து வருகிறேன்.

இதுவரை, 5,600க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளேன். 10 முறைக்கு மேல் பாம்பு என்னை கடித்துள்ளது. சமீபத்தில், குட்டி நாகப்பாம்பு ஒன்றை பிடித்தேன். அது ஃபதேஹாபாத்தில் சுதந்திர தின விழா நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள திறந்த பகுதியில் காணப்பட்டது. அங்கு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றினார்.

10 முறை கடிப்பட்டும் அசால்ட் செய்யும் இரும்புகோட்டை முரட்டு சிங்கம்:

சமீபத்திய வெள்ளத்தின் போது பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மரங்களில் தஞ்சமடைந்த பல பாம்புகளை பிடித்தேன். மீட்கப்பட்ட பாம்புகளை காடுகளில் விட்டுவிட்டேன்" என்றார். முழு நேர வேலையாக பாம்புகளை பிடிக்க தூண்டியது எது என்று கேட்டதற்கு, அவர் ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார்.

"அப்போது, சுமார் 17 வயது இருக்கும். கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு ஒரு பாம்பு புகுந்தது. அக்கம் பக்கத்தினரும் அங்கு கூடியிருந்த மக்களும் அதைக் கொல்ல முயன்றபோது, ​​அந்த உயிரினத்துக்குத் தீங்கு செய்ய வேண்டாம் என்று அவர்களை வற்புறுத்தினேன். நான் அதை காப்பாற்ற முயற்சித்தேன்.

ஆனால், அதற்குள் யாரோ பாம்பை அடித்து கொன்றனர். அந்த சம்பவம் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு, டிஸ்கவரி சேனலைப் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் சிறிய பாம்புகளை காப்பாற்ற ஆரம்பித்தேன். பாம்புகளைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்து அவற்றைப் பற்றிய தகவல்களை சேகரித்தேன்.

இப்போது என்னால் பாம்புகளை எளிதில் கையாள முடிகிறது. இதுவரை, 5,600க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளேன். நாகப்பாம்பு உட்பட 10 முறை பாம்பு கடித்ததால் இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை ஓநாய் பாம்பு கடித்தது. ஆனால், அது விஷமற்றது.

மக்கள் என்னை தொலைபேசியில் அழைக்கிறார்கள். நான் எனது குழுவுடன் அங்கு செல்வேன். நாங்கள் பாம்புகளை பிடித்து காட்டில் விடுகிறோம். எனது குழுவில் மேலும் மூன்று பேர் உள்ளனர். பாம்பை பிடிக்க செல்லும்போது, சிறப்பு கையுறைகள், குச்சிகள், காலணிகள், கொக்கி மற்றும் பிற பாதுகாப்பு கியர்களை எடுத்துச் செல்வோம். ஃபதேஹாபாத் மாவட்ட நிர்வாகம் எனது குழுவினர் செய்து வரும் சமூக சேவையை அங்கீகரித்து கடந்த காலங்களில் என்னை கவுரவித்துள்ளது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Crime: அதிமுக பிரமுகர் வெட்டி கொலை.. சேலத்தில் பெரும் பரபரப்பு.. நடந்தது என்ன?
Crime: அதிமுக பிரமுகர் வெட்டி கொலை.. சேலத்தில் பெரும் பரபரப்பு.. நடந்தது என்ன?
100 crore movies : இனிதான் ஆட்டமே இருக்கு! 2024ல் இதுவரையில் 100 கோடி அள்ளிய தமிழ் படங்கள் என்னென்ன?
இனிதான் ஆட்டமே இருக்கு! 2024ல் இதுவரையில் 100 கோடி அள்ளிய தமிழ் படங்கள் என்னென்ன?
ABP Impact: பனையங்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்த நெல்லை ஆட்சியர்.. மகிழ்ந்த மாணவ, மாணவியர்
பனையங்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்த நெல்லை ஆட்சியர்..
Embed widget