![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
உடலுறவின்போது காண்டத்திற்கு பதில் பசையை பயன்படுத்தி இளைஞர் மரணம்!
அவர்களிடம் கருத்தடை சாதனம் இல்லாத காரணத்தால் அங்கிருந்த பசையை வைத்து மர்ம உறுப்பை அடைத்துள்ளார்.
![உடலுறவின்போது காண்டத்திற்கு பதில் பசையை பயன்படுத்தி இளைஞர் மரணம்! Gujarat youth Dies After Using Adhesive Instead of Condom, says Police உடலுறவின்போது காண்டத்திற்கு பதில் பசையை பயன்படுத்தி இளைஞர் மரணம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/64cdc52be7b964fd28ebc6f3618496e3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சல்மான் என்ற 25 வயது இளைஞர், தனது முன்னாள் காதலியுடன் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். அப்போது இருவரும் உடலுறவு முடிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களிடம் கருத்தடை சாதனம் இல்லாத காரணத்தால் அங்கிருந்த பசையை வைத்து மர்ம உறுப்பை அடைத்துள்ளார்.
இதனிடையே சல்மான், மயக்கம் அடைந்த நிலையில், ஹோட்டல் அருகே உள்ள புதரில் கிடப்பதாக அவரது நண்பர் பெரோசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற பெரோஸ், சிதைந்த நிலையில் கிடந்த சல்மானை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
சல்மானும் அவரது காதலியும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்றும், சம்பவத்தன்றும் போதை பொருள் உட்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. சல்மான் மரணம் குறித்த வழக்கை விசாரித்து வரும் காவல் அதிகாரி தெரிவிக்கையில், ”ஒயிட்னர் மற்றும் பசைத்தன்மை கொண்ட கலவையிலான பொருளை காண்டத்திற்கு பதிலாக அவர் பயன்படுத்தி உள்ளார். விஷத்தன்மை நிறைந்த அந்த பசை மர்ம உறுப்பு மட்டுமின்றி மற்ற உறுப்புகளையும் தாக்கி செயலிழக்க வைத்து உள்ளது. இதன் காரணமாக சல்மான் உயிரிழந்துள்ளார். விடுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் சல்மான் ஒரு பெண்ணுடன் உள்ளே செல்வது தெளிவாக உள்ளது” என்றார்.
சல்மான் தனது வயதான பெற்றோர் மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்தார். அந்த குடும்பம் சல்மானை மட்டுமே நம்பி இருந்தது. இந்த சூழலில் அவரது உயிரிழப்பால் குடும்பம் நிற்கதியாகிவிட்டது. இந்த நிலையில் சல்மானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர் சாய்ராபானு மிர்சா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். சல்மான் உடல்நிலையை பாதிக்கக்கூடிய மருந்துகளை பயன்படுத்தியதால் இறந்திருக்கலாம் என்றும், வழக்கை திசைதிருப்பும் நோக்கத்துடன் அவரது உடலில் பசையை சேர்த்திருக்கலாம் என்றும் சல்மானின் நண்பர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும் முறையற்ற உறவால் ஏற்பட்ட இந்த விபரீதம் அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)