மேலும் அறிய

135 பேர் உயிரிழப்புக்கு காரணமான மோர்பி பால விபத்து... குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளியின் பெயர்! அதிர்ச்சி தகவல்

மோர்பி பாலத்தை பராமரித்து வந்ததில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாலத்தை பராமரித்து வந்த ஓரேவா குழுமம் மீது சந்தேகம் பார்வை நீண்டது.

கடந்தாண்டு, அக்டோபர் 30ஆம் தேதி மாலை 6.42 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.  

இந்தப் பால விபத்து தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

மோர்பி பாலத்தை பராமரித்து வந்ததில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாலத்தை பராமரித்து வந்த ஓரேவா குழுமம் மீது சந்தேகம் பார்வை நீண்டது.

பால விபத்து நடந்ததில் இருந்து ஓரேவா குழுமத்தின் தலைவர் ஜெய்சுக் படேல் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க கடந்த ஜனவரி 16ஆம் தேதி ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், 1,262 பக்க குற்றப்பத்திரிகையை குஜராத் காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், முக்கிய குற்றவாளியாக ஜெய்சுக் படேலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருந்து வருவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்கான்ட்ராக்டர்கள், டிக்கெட் குமாஸ்தாக்களாக பணிபுரிந்த தினக்கூலி தொழிலாளர்கள், பாதுகாப்பு காவலர்கள் உட்பட, முன்பு கைது செய்யப்பட்ட ஒன்பது பேருடன் ஜெய்சுக் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி அசோக் யாதவ் கூறுகையில், "அவரை விரைவில் கைது செய்ய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரை இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த தொங்கு பாலம் மச்சு ஆற்றின் மேல் அமைந்துள்ளது. இந்த பாலத்தை பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை ஓரேவா குழுமம் எடுத்திருந்தது. புதுப்பித்தலுக்குப் பிறகு கடந்தாண்டு அக்டோபர் 26 அன்று பாலம் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.

விபத்து நடந்த நாளன்று நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாலத்தில் அனுமதிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பாலத்தில் ஏறுவதற்காக 3,165 டிக்கெட்டுகளை ஓரேவா குழுமம் விற்றுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் சுமை தாங்கும் திறனை கருத்தில் கொள்ளாமல் அதிக எண்ணிக்கையில் ஓரேவா குழுமம் டிக்கெட்டை விற்றுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு, இந்த குளறுபடியை உறுதி செய்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
Embed widget