மேலும் அறிய

Fire Accident: "மனிதர்களால் நிகழ்ந்த பேரழிவு" ராஜ்கோட் விபத்து குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் கருத்து!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விளையாட்டு அரங்கு ஒன்றில் நடைபெற்ற தீ விபத்தில் 33 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது ராஜ்கோட். நாட்டின் முக்கியமான நகரங்களில் ராஜ்கோட்டும் ஒன்றாக உள்ளது. இங்கு பொழுதுபோக்கு பகுதியாக குழந்தைகள், இளைஞர்களை கவரும் வகையில் விளையாட்டுத் தளம்( கேமிங் ஜோன்) ஒன்று உள்ளது.

33 பேர் உயிரிழப்பு:

இந்த நிலையில், திடீரென நேற்று மாலை இங்கு தீப்பிடித்தது. திடீரென பிடித்த தீ மளமளவென பரவியது. இந்த தீ பரவியதால் மக்கள் அலறியடித்து அங்கும், இங்கும் ஓடினர். இந்த சம்பவத்தில் சிக்கி 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விளையாட்டு தளத்தில் வெல்டிங் வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது தீ பரவியதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு தகவலறிந்த உடனே, தீயணைப்புத்துறையினர் சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீப்பிடிப்பு சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

பெரும் சோகம்:

சம்பவம் தொடர்பாக ராஜ்கோட் காவல் ஆணையர் ராஜூ பார்கவ் நேற்று கூறியதாவது, "இன்று மதியம் அந்த விளையாட்டு தளத்தில் இருந்து திடீரென தீயுடன் கூடிய புகை வந்தது. தற்போது மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது தீ கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார். இதுவரை 20 சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, குடும்பத்துடன் மக்கள் பொழுதுபோக்கிற்காக சென்ற இடத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்தது குஜராத் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்றம் பரபர கருத்து:

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, விபத்து நடைபெற்ற இடத்திற்கு சொந்தமான யுவராஜ் சோலங்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குஜராத் உயர் நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.

ராஜ்கோட் விபத்தை மனிதரால் நிகழ்ந்த பேரழிவு என குறிப்பிட்ட நீதிமன்றம், "மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரு பேரழிவு நிகழ்ந்துள்ளது. அங்கு குழந்தைகளின் அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன. உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அந்தந்த குடும்பங்கள் துயரத்தில் இருக்கின்றன.

குஜராத் பொது வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் (GDCR) உள்ள ஓட்டைகளை ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு தளம் சாதகமாகப் பயன்படுத்தியதாக செய்தித்தாள் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன" என தெரிவித்தது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget