மேலும் அறிய

`சராசரியை விட 6 மடங்கு பாதிப்பு’ - டெல்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகள்!

டெல்லியின் காற்றில் மாசுத் தன்மை அதிகரித்து வருவதால் டெல்லி அரசு சார்பில் டெல்லியில் வாழும் மக்களுக்குப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

டெல்லியின் காற்றில் மாசுத் தன்மை அதிகரித்து வருவதால் டெல்லி அரசு சார்பில் டெல்லியில் வாழும் மக்களுக்குப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. காற்று மாசுவைக் கண்காணிக்கும் மத்திய குழு, டெல்லி அரசு அதிகாரிகளையும், தனியார் நிறுவனங்களையும் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ளனர். 

காற்று மாசு கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் Graded Response Action Plan (GRAP) கமிட்டி, வரும் நவம்பர் 18 முதல் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் அளவுக்குப் பருவ நிலை ஒத்துழைக்காது எனவும், அவசர காலத்தைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது. 

விவசாயிகளால் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள் டெல்லி காற்று மாசுவை ஏற்படுத்தியதில் 35 சதவிகிதம் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. 

`சராசரியை விட 6 மடங்கு பாதிப்பு’ - டெல்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகள்!

மத்திய காற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் PM2.5 என்று அழைக்கப்படும் நுரையீரலைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களின் அளவு கடந்த 24 மணி நேரத்தில் அதன் எல்லையான 300 என்பதைக் கடந்து, ஒரு க்யூபிக் மீட்டர் காற்றில் 381 மைக்ரோ கிராம்கள் என்ற அளவில் கடந்த நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு அளவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. 

பாதுகாப்பான அளவான ஒரு க்யூபிக் மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம்கள் என்ற அளவை விட சுமார் 6 மடங்கு அதிகம் இது என அறியப்பட்டுள்ளது. அதனால் அடுத்த இரண்டு நாள்களுக்கு இதே நிலை நீடித்தால், டெல்லி நகரம் அவசர நிலையில் இருப்பதாக அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

`சராசரியை விட 6 மடங்கு பாதிப்பு’ - டெல்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகள்!

டெல்லி காற்று மாசு குறித்து வெளியிடப்பட்ட பரிந்துரைகள்:

1. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை வாகனப் பயன்பாட்டைக் குறைந்தபட்சம் சுமார் 30 சதவிகிதம் என்ற அளவில் குறைக்க வேண்டும்; வெளியில் வேலைகளை மக்கள் தவிர்த்து, வீட்டிலேயே இருக்க வேண்டும். 

2. அரசு அதிகாரிகள் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். 

3. டெல்லி நகரத்திற்குள் லாரிகள் நுழைவைத் தடுப்பது, கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துவது, கார்களைப் பயன்படுத்துவதில் விதிமுறைகள் முதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

கடந்த நவம்பர் 12 அன்று, டெல்லி தலைநகர்ப் பகுதியில் சுமார் 200 மீட்டர்களுக்கு அப்பால் உள்ளவற்றைப் பார்வையிடுவதற்கு முடியாதவாறு, புகை மண்டலம் சூழ்ந்து கண்கள் எரியும் அளவுக்கு நச்சுத் தன்மை வாய்ந்ததாக இருந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், சப்தர்ஜங் விமான நிலையம் ஆகியவற்றிலும் பார்வையிடும் அளவு 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தெரியாதவாறு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget