மேலும் அறிய

கலவரக்காரர்கள், ராணுவத்தினர் இடையே மோதல்... துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு.. மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

காலை 9 மணி வரை நீடித்த கடும் துப்பாக்கிச் சூட்டில், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூரில் இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள்:

மாநில காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. இந்த சூழ்நிலையில், எல்லை பகுதியான மேற்கு இம்பால் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள், இந்திய ராணுவத்தினர் ஆகியோருக்கிடையே மோதல் வெடித்தது.

அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "குக்கி கிராமமான ஹராத்தோலில் தாக்குதல் நடந்தது. இதை தொடர்ந்து, அதிகாலை 5.30 மணியளவில் கலவரக்காரர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பதிலுக்கு அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச்சூட்டால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்:

சம்பவ இடத்திற்கு செல்லும் போது, ​​ஆயுதமேந்திய கலகக்காரர்கள், எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் சேதத்தை தடுக்க ராணுவம் சார்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவத்தினரின் துரித நடவடிக்கையால் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டது. கூடுதல் படைகள் சம்பவ பகுதிக்கு அனுப்பப்பட்டன. சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன" என்றார்.

காலை 9 மணி வரை நீடித்த கடுமையான துப்பாக்கிச் சூட்டில், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்ற அதேநாள் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி சென்ற போது, அவரின் கான்வான் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது. இன்று முன்னதாக இம்பாலுக்கு விமானம் மூலம் சென்ற ராகுல் காந்தி, சுராசந்த்பூருக்குச் செல்லும் வழியில் அங்கிருக்கும் ராணுவ முகாம்களில் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

அப்போது, ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், "பாதுகாப்பு காரணங்களுக்காக இம்பாலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஷ்ணுபூரில் ராகுல் காந்தியின் கான்வாய் நிறுத்தப்பட்டது. சாலை வழியாக சுராசந்த்பூர் வரை பயணம் செய்வதற்கு பதிலாக ஹெலிகாப்டரில் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே முன்னெச்சரிக்கையாக, கான்வாயை விஷ்ணுபூரில் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டோம்" என்றார்.

இந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் தொடங்கியதில் இருந்து சுமார் 50,000 பேர் இப்போது மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget