மேலும் அறிய

Mumbai: மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

மும்பையில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். 

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். 

மகாராஷ்ரா மாநிலம் மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள எம்ஜி சாலைக்கு அருகில் உள்ள ஜெய் சந்தேஷ் என்ற 5 மாடி குடியிருப்புஇந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தரைதளத்தில் இருந்த பழைய பொருட்கள், நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் இருந்து தீ கிளம்பியதாக பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மேல் தளத்தில் குடியிருக்கும் மக்கள் இன்னல்களுக்கு மத்தியில் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு குடிசை மக்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் தீயணைப்பு கருவிகள் கூட கிடையாது. லிஃப்ட் வசதியும் சரியாக செயல்பாட்டில் இல்லாத நிலையில் அதன் வழியாக புகை மேலே பரவியதும் தான் தீ விபத்து பற்றி மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனிடையே கோரேகான் தீ விபத்து குறித்து மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மும்பையின் கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மற்றும் உடைமை இழப்பு பற்றிய தகவல் அறிந்து வருத்தமடைந்தேன். நாங்கள் கிரேட்டர் மும்பை மாநகராட்சி மற்றும் மும்பை காவல்துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் தான் இருக்கிறோம். இதன் வழியாக அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு "என் ஆழ்ந்த இரங்கல்கள்." மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget