மேலும் அறிய

Electric Car Fire: பெங்களூரில் குபுகுபுவென எரிந்த எலக்ட்ரிக் கார்; வைரலாகும் வீடியோ

காரினை இயக்கி வந்தவர் கவனமாக செயல்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் உள்ள டால்மியா சர்க்கிள் அருகே மின்சார கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் காரில் இருந்து அதிகப்படியான நெருப்பு கரும்புகையை வெளிப்படுத்தியவாறு எரிகிறது.  நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஆகவில்லை. காரினை இயக்கி வந்தவர் கவனமாக செயல்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோவில் காரின் டயர் வெடிப்பது போன்று தெரிகிறது. 

இந்த சம்பவம் மின்சார வாகனங்களின் (EV) பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்படும் வீடியோவாக உள்ளதால் இணையவாசிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்தியாவைப் பொறுத்த வரையில் மின்சார வாகனம் தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, புனேவில் ஓலா எலக்ட்ரிக் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது இதுபோன்று வைரலானது. அதன்பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்ந்து இதுபோன்ற  சம்பவங்களின் விளைவாக, பல EV உற்பத்தியாளர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் மனித உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் காரணங்களாக கண்டறியப்படும் வாகனங்களை திரும்பப்பெற வேண்டும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இதுபோன்ற விபத்துகள் மின்சார வாகனங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தரநிலைகள் உள்ளிட்ட முக்கியமான கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். 

பெங்களூருவில் ஏற்பட்ட மின்சார கார் தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், இந்த சம்பவங்கள் EV துறையில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன என சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். அதேபோல் மின்சார வாகனங்கள் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இதனால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கவும், இந்த வாகனங்களின் பாதுகாப்பு குறித்து நுகர்வோருக்கு உறுதியளிக்கவும் கடுமையான பாதுகாப்பு முறைகளையும் உற்பத்தியாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 

மின்சார வாகனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், உற்பத்தியாளர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பங்குதாரர்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். இது நுகர்வோர்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன்,  மின்சார வாகனங்களை அதிக அளவில் மக்கள் வாங்கவும் முன்வருவார்கள். 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget