மேலும் அறிய

Domestic Air Passengers : ஒரே நாளில் 4.50 லட்சம் பயணிகள்.. உச்சம் தொட்ட உள்நாட்டு விமான போக்குவரத்து.. இதோ விவரம்..

நேற்று, ஒரே நாளில், 4 லட்சத்து 56 ஆயிரத்து 82 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து உச்சம் தொட்டுள்ளது. நேற்று, ஒரே நாளில், 4 லட்சத்து 56 ஆயிரத்து 82 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணை முட்டும் அளவுக்கு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:

விண்ணை முட்டும் அளவுக்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது நாட்டின் செழுமை அதிகரித்திருப்பதை காட்டுகிறது என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடந்த சில மாதங்களாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய சராசரியை மிஞ்சியது.

நேற்று, 2,978 விமானங்களில் மொத்தம் 4,56,082 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது" என குறிப்பிட்டுள்ளது. கொரோனாவுக்கு முன், சராசரி தினசரி உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரபத்து 579 ஆக பதிவானது.

சாதனைகளை படைத்து வரும் விமான போக்குவரத்துத் துறை:

"நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது" என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம், உள்நாட்டு விமானங்கள் மூலம் 128.93 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். இது கடந்தாண்டு மார்ச் மாதத்தை காட்டிலும், 21.4 சதவிகிதம் அதிகம். மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 375.04 லட்சம் பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் வகையில், கடந்த நிதியாண்டில், பயணியரின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ஐ.சி.ஆர்.ஏ. தெரிவித்துள்ளது. ஐ.சி.ஆர்.ஏ., எனப்படும் முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம், உள்நாட்டு விமான போக்குவரத்து பயணியர் குறித்த தரவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் சுப்ரியோ பானர்ஜி கூறுகையில், "உள்நாட்டு விமானப் போக்குவரத்தில், பயணியரின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில், அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 60 சதவீதம் உயர்ந்து, 13.60 கோடி என்ற அளவில் உள்ளது.

இருப்பினும், இந்த எண்ணிக்கை, தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த 14.15 கோடி என்ற எண்ணிக்கையைவிட, 4 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
Tamilnadu Roundup: திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கோவை வரும் அமித்ஷா - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கோவை வரும் அமித்ஷா - தமிழ்நாட்டில் இதுவரை
முஸ்லீம் ஊழியர்கள் குஷி! ஒரு மணிநேரத்திற்கு முன்பே கிளம்பலாம்! - தெலுங்கானாவைத் தொடர்ந்து, ஆந்திர அரசும் அதிரடி!
முஸ்லீம் ஊழியர்கள் குஷி! ஒரு மணிநேரத்திற்கு முன்பே கிளம்பலாம்! - தெலுங்கானாவைத் தொடர்ந்து, ஆந்திர அரசும் அதிரடி!
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.