மேலும் அறிய

Bharatpol: சிங்கம் ஸ்டைலில்.. இந்தியா அறிமுகம் செய்த பாரத்போல், இன்டர்போல்க்கே டஃப் - இனி தப்பவே முடியாது..

Bharatpol Vs Interpol: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாரத்போல் விசாரணை அமைப்பு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Bharatpol Vs Interpol: சர்வதேச குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக,  மத்திய அரசு பாரத்போல் விசாரணை அமைப்பை உருவாக்கியுள்ளது.

பாரத் போல் அமைப்பு ஏன்?

நாட்டில் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் சில குற்றவாளிகள் தவறு செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடிவிட்டதாக செய்திகள் வருகின்றன. அதன் பிறகு, அவர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை ஒடுக்க, பாரத்போல் போர்டலை உள்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த போர்டலை தொடங்கி வைத்துள்ளார். இது சிபிஐ உருவாக்கிய மேம்பட்ட ஆன்லைன் போர்டல் ஆகும்.

பாரத் போர்டல் பலன்கள் என்ன?

பாரத்  போர்டல் மூலம், எந்த மாநிலத்தின் பாதுகாப்பு ஏஜென்சிகளும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகள் பற்றிய தகவல்களை சிபிஐ மூலம் பெற முடியும். இது மட்டுமின்றி, சிபிஐ மூலம் பாதுகாப்பு ஏஜென்சியும் இந்த போர்டல் மூலம் இன்டர்போலின் உதவியையும் விரைவாகப் பெற முடியும். இண்டர்போல் அமைப்பிற்கு நிகராக பாரத்போல் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், இன்டர்போல் என்றால் என்ன என்பதுதான் தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.

இன்டர்போல் என்றால் என்ன? 

இன்டர்போல் என்பது சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பைக் குறிக்கிறது. இது உலகின் மிகப்பெரிய சர்வதேச போலீஸ் அமைப்பாகும்.  சர்வதேச அளவில் குற்றம் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளின் காவல்துறையினருக்கும் இடையே ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு. அதாவது 195 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அமைப்புகளின் தொகுப்பாகும்.

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு குற்றவாளிகள் பற்றிய தகவல்களை பரிமாறி அவர்களை கைது செய்ய இன்டர்போல் மூலம் சர்வதேச நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதில் இந்தியத் தரப்பில் இருந்து சிபிஐ ஈடுபட்டுள்ளது. எளிமையான மொழியில், ஒரு மாநில காவல்துறை அல்லது பிற நிறுவனம் வேறொரு நாட்டில் வசிக்கும் குற்றவாளியைப் பற்றிய தகவலை விரும்பினால், அது சிபிஐக்கு கோரிக்கையை அனுப்பும். அவர்கள் இன்டர்போலிடமிருந்து தேவையான தரவுகளை திரட்டி, குறிப்பிட்ட காவல்துறைக்கு வழங்குவார்கள். 

இன்டர்போல் நோட்டீஸ்

இன்டர்போலுக்கு இந்தியாவில் இருந்து சிபிஐ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்டர்போல் பல வகையான அறிவிப்புகளை வெளியிடுகிறது, அவற்றில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் உள்ளன. காணாமல் போனவர்களுக்கு வழங்கப்படும் மஞ்சள் நோட்டீஸ். இது தவிர, தேடப்படும் குற்றவாளிகள்/குற்றவாளிகளுக்கான சிவப்பு நோட்டீஸ். இந்த அமைப்பு 1923 முதல் செயல்பட்டு வருகிறது. இன்டர்போலின் தலைமை அலுவலகம் பிரான்சின் லியோன் நகரில் உள்ளது.

பாரத் போலின் ஐந்து முக்கிய அம்சங்கள்:

ஒருங்கிணைந்த தளம் : இந்த போர்டல் CBI ஐ இன்டர்போலாக (NCB-புது டெல்லி) இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கிறது.

எளிமைப்படுத்தப்பட்ட கோரிக்கை முறை: தரப்படுத்தப்பட்ட வார்ப்புருக்களைப் பயன்படுத்தி 195 இன்டர்போலின் உறுப்பு நாடுகளிடமிருந்து சர்வதேச உதவியை எளிதாகவும் உடனடியாகவும் கோருவதற்கு காவல்துறை உயர் அதிகாரிகளை இந்த போர்டல் அனுமதிக்கிறது.

விரைவான தகவல் பரப்புதல்: இந்த போர்டல், 195 நாடுகளின் குற்றவியல் புலனாய்வு மற்றும் உள்ளீடுகளை இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களுடனும் விரைவாகப் பகிர்ந்து கொள்ள NCB ஆக CBI ஐ செயல்படுத்துகிறது.

இன்டர்போல் அறிவிப்புகளின் பயன்பாட்டை அதிகரிப்பது: இந்த போர்டல் ரெட் கார்னர் நோட்டீஸ் கோரிக்கைகள் மற்றும் இன்டர்போலின் பிற வண்ணக் குறியீட்டு அறிவிப்புகளை எளிதாக வரைவு செய்ய உதவும். இது உலகளவில் குற்றம், குற்றவாளிகள் மற்றும் விசாரணையை  திறம்பட கண்காணிக்க வழிவகுக்கும்.

திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி : இந்த போர்டல் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பயிற்சி ஆதாரங்களுக்கான அணுகலை வழங்குகிறது.வெளிநாட்டில் விசாரணைகளை நடத்துவதற்கான முன்னணி அதிகாரிகளின் திறனை மேம்படுத்துகிறது மற்றும் இன்டர்போல் மூலம் வெளிநாட்டு உதவியை திறம்பட பெறுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
Madurai ; வைகோவின் 'சமத்துவ நடைபயணம்': துரை வைகோ கண் கலங்க, பாஜகவை எச்சரித்த வைகோ!
Madurai ; வைகோவின் 'சமத்துவ நடைபயணம்': துரை வைகோ கண் கலங்க, பாஜகவை எச்சரித்த வைகோ!
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
Virat Kohli: மகள் பிறந்த நாளில் சதத்தை தவறவிட்ட கோலி... நொறுங்கிய ரசிகர்கள் இதயம்!
Virat Kohli: மகள் பிறந்த நாளில் சதத்தை தவறவிட்ட கோலி... நொறுங்கிய ரசிகர்கள் இதயம்!
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
Embed widget