மேலும் அறிய

Delhi University Statement : தலித்திய,பெண்ணிய படைப்பாளிகளின்  படைப்புகள் நீக்கியது ஏன்? டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்..

பன்முகத்தன்மை, நல்லிணக்கம், சகோதரத்துவ உணர்வை வெளிபடுத்தும் விதமாக பாடத்திட்டங்கள் உள்ளன

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து  மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினர் எதிர்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,டெல்லி பலகலைக்கழகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும், தனி மனிதர், ஒரு சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கக்கூடாது என்றும் விளக்கமளித்தது. 

முன்னதாக, கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில், " டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகா ஸ்வேதாதேவி பாமா,சுகிர்தராணி  ஆகிய காத்திரமான தலித்திய,பெண்ணிய படைப்பாளிகளின்  படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள்,பட்டியலின மக்களுக்கு எதிரான பிஜேபி/ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கையே இது.  கூடுதலாக பாமாவும்,சுகிர்தராணியும் பிஜேபி/ ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை உறுதியோடு எதிர்க்கிற தமிழ்மண்ணின் படைப்பாளிகள்.மோடி அரசின் இந்த பாசிச செயல்பாடு கடுமையான கண்டனத்திற்குரியது. உடனடியாக நீக்கப்பட்ட படைப்புகள் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்" என்று பதிவிட்டார்.  

டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " மேற்பார்வை குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் பி.ஏ ஹானர்ஸ் (ஆங்கிலம்) ஐந்தாவது செமஸ்டருக்கான பாடத்திட்டத்தை டெல்லி பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பாக ஊடகங்களில்  வெளியான செய்திகள்    தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம். பாடத்திட்டம் தொடர்பாக அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைகளை பெற்றும், பொறுத்தமான அனைத்து தளங்களிலும்  கலந்துரையாடல் நடத்தியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  

பாடத்திட்டத்தின் இறுதி உள்ளடக்கத்தை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை வடிவமைத்தது.  பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவால் அமைக்கப்பட்ட அதிகாரம் பெற்ற மேற்பார்வைக் குழு, கலந்தாலோசித்தும், ஆங்கிலத் துறையின் தலைவர்  பரிந்துரைகளை ஏற்றும், பாடத்திட்டத்தை இறுதி செய்தது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.du.ac.in என்ற இனைய தளத்தில்  ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.


Delhi University Statement : தலித்திய,பெண்ணிய படைப்பாளிகளின்  படைப்புகள் நீக்கியது ஏன்? டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்..

பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதி,  இனம்,மதம் ஆகியவற்றைத் தாண்டி தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற பல்வேறு அறிஞர்களின் படைப்புகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. கல்வியில் சிறந்து விளங்க, சாதி மதி வேறுபாடுகளுக்கு அடிபணியத் தேவையில்லை என்று பல்கலைக்கழகம் நம்புகிறது.  

ஒரு மொழிப் பாடத்திட்டத்தில் இடம்பெறும் இலக்கிய படைப்புகள்  எந்தவொரு தனிநபரின் உணர்வுகளை புண்படுத்தாத வகையிலும்,  முற்காலத்திலும், தற்காலத்திலும் சமூகத்தின் உண்மை தன்மைகளை வெளிப்படுத்தும் பேதமற்ற இலக்கியப் படைப்புகள் தேவை என்பதை பல்கலைக்கழகம் உணர்கிறது. எழுத்திலும் கருத்திலும் பாடத்திட்டங்களை உள்வாங்கும் இளம் தலைமுறையினருக்கு  இத்தகைய உள்ளடக்கிய அணுகுமுறை முக்கியமானது. எனவே, பன்முகத்தன்மை, நல்லிணக்கம், சகோதரத்துவ உணர்வை வெளிபடுத்தும் விதமாக பாடத்திட்டங்கள் உள்ளன". இவ்வாறு, டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.    

  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget