முதல்வர் மீது தாக்குதல்.. பொது இடத்தில் கன்னத்தில் வைத்து அறைந்த மர்மநபர்! பாஜகவினர் அதிர்ச்சி
சிவில் லைன்ஸில் உள்ள அரசு இல்லத்தில் நடந்த பொது விசாரணையின் போது டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை மர்ம நபர் பல முறை அறைந்தார்.

முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டில் நடைபெற்ற ஜன் சன்வாய் (பொது விசாரணை) நிகழ்ச்சியில், மர்ம நபர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
டெல்லி முதல்வர் மீது தாக்குதல்:
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் சம்பவமானது சிவில் லைன்ஸில் உள்ள அரசு இல்லத்தில் நடந்த பொது விசாரணையின் போது டெல்லி முதல்வரைத் தாக்க முயற்சி நடந்தது. ஆதாரங்களின்படி, அவர், பல முறை அறைந்ததாக சொல்லப்படுகிறது, மேலும் அவரது தலைமுடியையும் பிடித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் 35 வயதுடையவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது விசாரணையின் போது, அந்த நபர் சில ஆவணங்களை கையில் எடுத்து வந்திருந்தார். அப்போது, அவர் முதல்வரைத் தாக்க முயன்றதாக தெரிகிறது. இந்தத் தாக்குதல் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பாஜக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.
தாக்குதல் நடத்தியவரிடம் போலீசார் விசாரணை
த, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரை சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். காவல்துறை விசாரணைக்கு பிறகு இது குறித்து விரிவான தகவல்கள் வெளியாகும்.
வீரேந்திர சச்தேவா கண்டனம் தெரிவித்துள்ளார்
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார். "வாராந்திர பொது விசாரணையின் போது முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்" என்றார். வீரேந்திர சச்தேவா, "ஒரு பெண் முதல்வராக இருந்து 18 மணி நேரம் வேலை செய்யும் போது, ஒருவர் எப்படி இப்படிச் செய்ய முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.
அரசியலில் வன்முறைக்கு இடமில்லை - வீரேந்திர சச்தேவா
மேலும், "அந்த நபர் பிடிபட்டுள்ளார், என்ன நடந்ததோ அது துரதிர்ஷ்டவசமானது. மருத்துவர் குழு முதலமைச்சரைச் சென்றடைகிறது. நானும் முதலமைச்சரைச் சந்திக்கச் செல்கிறேன். அரசியலில் வன்முறைக்கு இடமில்லை" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், டெல்லி அரசின் அனைத்து அமைச்சர்களும் முதல்வர் ரேகா குப்தாவின் இல்லத்தை அடைந்து வருகின்றனர். இந்த நபர் ஏன் முதல்வரைத் தாக்க முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்























