மேலும் அறிய

தூக்கி வீசப்பட்ட உடைமைகள்.. அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்ட டெல்லி முதல்வர் அதிஷி!

அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து டெல்லி முதலமைச்சர் அதிஷி வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அதிஷி, அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

எக்ஸ் தளத்தில் இதுபற்றி டெல்லி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட பதிவில், "நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் இல்லம் காலி செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் உத்தரவின் பேரில், முதல்வர் அதிஷியின் உடைமைகளை முதல்வர் இல்லத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளார் துணை நிலை ஆளுநர்" என குறிப்பிட்டுள்ளது.

அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிஷி?

இந்த குற்றச்சாட்டுகளுக்கு துணை நிலை ஆளுநர் இன்னும் பதில் அளிக்கவில்லை. முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து அட்டைப்பெட்டிகள் மற்றும் சாமான்கள் வெளியே எடுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு, முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் சாவியை ஒப்படைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறையிடம் (PWD) முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

டெல்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள அரசு இல்லத்திற்கு கடந்த திங்களன்று அதிஷி குடிபெயர்ந்தார். அவருக்கு முன்பு முதலமைச்சராக பதவி வகித்த அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில்தான் அங்கிருந்து வெளியேறினார்.

நடந்தது என்ன?

இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளது பாஜக. டெல்லி எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா, இதுகுறித்து கூறுகையில், "புதிய முதலமைச்சருக்கு ஒதுக்குவதற்காக பங்களா இன்னும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. கெஜ்ரிவால் அரசு இல்லத்தை இன்னும் காலி செய்யவில்லை. அவரது பெரும்பாலான உடைமைகள் இன்னும் அங்கேயே உள்ளன.

 

மதுரா சாலையில் உள்ள ஏபி-17 அரசு பங்களா அதிஷிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும் பாஜக குற்றம் சாட்டியது. கடந்த ஆண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் அரசில் அமைச்சராக பதவியேற்ற பிறகு அதிஷிக்கு ஏபி-17 குடியிருப்பு ஒதுக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி.. விஷம பிரச்சாரத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு.. சென்னையில் என்ஐஏ அதிரடி!
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி.. விஷம பிரச்சாரத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு.. சென்னையில் என்ஐஏ அதிரடி!
Joe Root:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் அடித்த ஜோ ரூட்; எங்கே? எத்தனை சதம்
Joe Root:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் அடித்த ஜோ ரூட்; எங்கே? எத்தனை சதம்
Pa Ranjith : சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு.. தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு.. தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
Group 4 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Group 4 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி.. விஷம பிரச்சாரத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு.. சென்னையில் என்ஐஏ அதிரடி!
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி.. விஷம பிரச்சாரத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு.. சென்னையில் என்ஐஏ அதிரடி!
Joe Root:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் அடித்த ஜோ ரூட்; எங்கே? எத்தனை சதம்
Joe Root:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் அடித்த ஜோ ரூட்; எங்கே? எத்தனை சதம்
Pa Ranjith : சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு.. தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு.. தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
Group 4 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Group 4 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Most Hundreds International Cricket :சர்வதேச கிரிக்கெட்டில் ஆக்டிவ் பிளேயர்களின் அதிக சதம்; முதல் இரண்டு இடம் யாருக்கு?
Most Hundreds International Cricket :சர்வதேச கிரிக்கெட்டில் ஆக்டிவ் பிளேயர்களின் அதிக சதம்; முதல் இரண்டு இடம் யாருக்கு?
Goundamani : நடிகர் கவுண்டமணி கைக்கு வந்த 50 கோடி சொத்து...20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் வெற்றி
Goundamani : நடிகர் கவுண்டமணி கைக்கு வந்த 50 கோடி சொத்து...20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் வெற்றி
ரத்த சோகைக்கு முற்றுப்புள்ளி! அனைவருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி.. திட்டத்தை நீட்டித்த மத்திய அரசு!
ரத்த சோகைக்கு முற்றுப்புள்ளி! தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
"அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது" தாத்தா ஸ்டைலில் உதயநிதி போட்ட ஒற்றை ட்வீட்!
Embed widget