மேலும் அறிய

ட்ரோன் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ராஜ்நாத் சிங் உறுதி

வணிகக்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும்பாலான வர்த்தகம் கடல்வழியிலே நடக்கிறது. இதனால், பல நாடுகள் தங்களது கடல் எல்லையில் பன்மடங்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 23ம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு அரபிக்கடல் வழியாக மங்களூர் துறைமுகம் நோக்கி வந்த எம்.வி.கெம் ப்ளூட்டோ மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

ட்ரோன் தாக்குதல்:

இந்த தாக்குதல் போலவே மற்றொரு வணிக கப்பலான எம்.வி. சாய்பாபா செங்கடலில் பயணித்து வந்திருந்தபோது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அரபிக்கடல், செங்கடலில் நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசியுள்ளார். இதுதொடர்பாக, அவர் பேசியுள்ளதாவது, “ கடல் கொந்தளிப்பு தற்போது சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார சக்தி சில சக்திகளுக்கு பொறுப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அரபிக்கடலில் எம்.வி.கெம் ப்ளூட்டோ மீதும், செங்கடலில் எம்.வி.சாய்பாபா மீதும் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தியதை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

கடும் நடவடிக்கை:

இந்திய கடற்படையினர் கடலில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முழு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திலும் இந்தியா பாதுகாப்பு வழங்குகிறது. இந்த பகுதியில் கடல் வாணிபம் வானம் வரை உயர்வதை உறுதி செய்வோம். இதற்காக, நட்பு நாடுகளுடன் இணைந்து கடல் வழிப்பாதைகளையும், கடல்சார் வர்த்தகத்தையும் பாதுகாப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ட்ரோன் தாக்குதலுக்கு பிறகு இந்திய கப்பல்படை ஐ.என்.எஸ். மோர்முகோவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய மூன்று போர்க்கப்பல்களை இந்திய கடல் எல்லையில் நிறுத்தியுள்ளது.

ட்ரோன் தாக்குதலுக்கு ஆளாகி மங்களூர் வந்துள்ள வணிகக்கப்பலான எம்.வி.கெம்ப்ளூட்டோவை இந்திய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.வி. சாய்பாபா மற்றும் எம்.வி. கெம்ப்ளூட்டோ கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போலவே நார்வே நாட்டின் எம்.வி. ப்ளாமனென் ரசாயன டேங்கர் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எம்.வி. கெம் ப்ளூட்டோ மீது தாக்குதல் நடத்திய ட்ரோன் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ABP-C Voter Opinion Poll: சாதிவாரி கணக்கெடுப்பு வேலைக்கு ஆகல! இதுதான் மக்களின் முக்கிய பிரச்னை - கருத்துக்கணிப்பில் தகவல்

மேலும் படிக்க: ABP-C Voter Opinion Poll: வடக்கில் பாஜக வேற லெவல்.. ஆனால் தெற்கில் ஒன்னும் செய்ய முடியல.. கருத்துக்கணிப்பில் பகீர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget