மேலும் அறிய

Lok Sabha Winter Session: தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே நடந்த மோதல்.. என்ன நடந்தது?

டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சால பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கமளிக்க உள்ளார்.

டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சால பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கமளிக்க உள்ளார். 

மாநிலங்களவை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் கடந்த வாரம் தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்க எதிர்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிற்பகலில் பதிலளிப்பார் என மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அர்சின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய மற்றும் சீன துருப்புக்கள் கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டில் (எல்ஏசி) சிறிது நேரம் மோதிக்கொண்டனர் .

டிசம்பர் 9 அன்று நடந்த மோதலில் இரு தரப்பிலிருந்தும் ஒரு சில வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறினர். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் இந்தச் சண்டை நடந்தது.

சீன துருப்புக்கள் LAC ஐக் கடந்ததை தொடர்ந்து இந்தியா வீரர்கள் அதனை துணிந்து எதிர்கொண்டு சண்டையிட்டனர்.  கிழக்கு லடாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு, இந்திய-சீனப் படைகளுக்கு இடையே இதுபோன்ற மோதல்கள் இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.  2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம், இதுவரை நடந்த மோதல்களில் மிக மோசமானது, நாட்டிற்காக 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 40 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் அதில் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்களை ஏற்படுத்தியது, இதில் ஒன்று பாங்காங் ஏரியின் தென் கரையில் நடந்தது. ராணுவத் தளபதிகளுக்கு இடையேயான பல சந்திப்புகளுக்குப் பிறகு, லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளில் இருந்து இந்திய மற்றும் சீன துருப்புக்கள் பின்வாங்கின. அரசாங்க வட்டாரங்களின்படி, 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற மோதல்கள் கருத்து வேறுபாடு காரணமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டரில் எல்ஏசியை ஒட்டிய சில பகுதிகளில், இரு தரப்பினரும் தங்கள் கட்டுப்பாட்டு எல்லை வரை ரோந்துப் பணியில் ஈடுபட்டுவது வழக்கம்.  09 டிசம்பர் 2022 அன்று, சீனத் துருப்புக்கள் தவாங் செக்டரில் உள்ள எல்ஏசியைத் நெருங்கியபோது இந்திய ராணுவ வீரர்கள் அதனை துணிச்சலுடன் கையாண்டனர் என அந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  இந்த சம்பவத்திற்கு பின், அப்பகுதிக்கு ராணுவ தளபதி, சீன அதிகாரிகளிடம் கொடி சந்திப்பு நடத்தி  அமைதியை உறுதி செய்தார்.        

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.