மேலும் அறிய

சட்டமன்ற தேர்தல் 2026

(Source:  Poll of Polls)

Crime: ரசகுல்லாவிற்காக இளைஞர் குத்திக்கொலை..! கலவர வீடாக மாறிய கல்யாண வீடு..!

Crime: உத்தரபிரதேசத்தில் கல்யாண விருந்தில் ரசகுல்லா பற்றாக்குறையால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தரபிரதேசத்தில் கல்யாண விருந்தில் ரசகுல்லா பற்றாக்குறையால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் எட்பத்பூரில் கடந்த புதன்கிழமை ஒரு இஸ்லாமியர் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று காலை திருமணம் முடிந்து இரவு ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவில் கல்யாண விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ரசகுல்லா வேண்டும் என்று ஒருவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ரசகுல்லா இல்லாத காரணத்தினால் மணமகன் மற்றும் மணமகள் தரப்பு குடும்பத்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சிறிது நேரத்தில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் பெரியதாகி கைகலப்பாக மாறியது. அங்கு இருக்கும் தட்டு, கரண்டி, சொம்பு போன்ற பாத்திரங்களை ஒருவருக்கொரவர் வீசி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் யாரோ ஒருவர், ஒரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஒருவர் உயிரிழந்தது கூட தெரியாமல் அந்த இடத்தில் சண்டை தீவிரமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக அக்கப்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்புக்கு சமாதானம் செய்து வைத்தனர். கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, எட்மத்பூர் வட்ட அதிகாரி ரவிக்குமார் குப்தா கூறுகையில், “ரசகுல்லா பற்றாக்குறை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கடுமையான மோதலாக மாறி, கல்யாண விருந்துக்கு வந்த ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதில் பலத்த அடைந்த சன்னி (22)  என்பவர் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 5 பேர் எட்மத்பூரில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

Crime: காதல் மனைவியை தேடி வந்த கேரள இளைஞர்.... திருவண்ணாமலையில் உயிரிழந்த சோகம்

கோவையில் பந்த் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை - எச்சரித்த நீதிமன்றம்..! அழைப்பே விடுக்கவில்லை - அண்ணாமலை..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Assam Exit Poll Results: அசாமில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன.?
அசாமில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன.?
West Bengal Exit Poll: மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
Top 10 News Headlines: இன்று மாலை எக்சிட் போல்.. சிபிஐ வசம் டிரான்ஸ்பார்மர் வழக்கு.. ஹனிமூன் வழக்கில் ஜாமீன்
Top 10 News Headlines: இன்று மாலை எக்சிட் போல்.. சிபிஐ வசம் டிரான்ஸ்பார்மர் வழக்கு.. ஹனிமூன் வழக்கில் ஜாமீன்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!
தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!
TVK Vijay : ’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?
’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?
TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்
TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now, Vote Vibe கருத்துக் கணிப்பில் தகவல்..! - உற்சாகத்தில் தொண்டர்கள்!!
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now கணிப்பில் அதிரடி..!
TN Exit Poll Results :
TN Exit Poll Results : "ஆட்சியை தக்க வைக்கும் திமுக” சாணக்கியா Strategies கணிப்பு..!
Honda City Facelift: அடி சக்க.! சூப்பரான கார் இன்னும் சூப்பரா மாறப்போகுது.! ஃபேஸ்லிஃப்ட்டில் ப்ரீமியமாகும் ஹோண்டா சிட்டி
அடி சக்க.! சூப்பரான கார் இன்னும் சூப்பரா மாறப்போகுது.! ஃபேஸ்லிஃப்ட்டில் ப்ரீமியமாகும் ஹோண்டா சிட்டி
"வெற்றியை நோக்கி நாம் தமிழர் கட்சி” கருத்துக் கணிப்பில் மகிழ்ச்சி தகவல்..!
West Bengal Exit Poll: மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
Embed widget