மேலும் அறிய

Covid: புதிய வகை கொரோனா; சீனாவைப் போல இந்தியாவிலும் தீவிர பாதிப்பு ஏற்படுமா..? மூத்த விஞ்ஞானி பதில்...!

சீனாவில் நிலவும் தீவிரமான கொரோனா நிலை போல இந்தியாவில் ஏற்படாது என மூத்த விஞ்ஞானியும் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநருமான வினய் கே நந்திகூரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவாக தொடங்கியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவிற்கு ஆபத்தா..?

சீனாவில் பரவி வரும் கொரோனாவுக்கு BF.7 வகை கொரோனாவே காரணமாகும். சீனாவை போல இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சீனாவில் நிலவும் தீவிரமான கொரோனா நிலை போல இந்தியாவில் ஏற்படாது என மூத்த விஞ்ஞானியும் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநருமான வினய் கே நந்திகூரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்கள் மத்தியில் ஹெர்ட் இம்யூனிட்டி தோன்றிவிட்டதால் சீனாவை போல் அல்லாமல் இந்தியாவில் கொரோனா நிலை அந்த அளவுக்கு தீவிர தன்மையோடு இருக்காது என அவர் கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி திறன்:

கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், "இந்த அனைத்து வகைகளும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களும் இந்த கொரோனாவால் பாதிக்கப்படலாம்.

அதேபோல, ஒமைக்ரானால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவரும் இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்படலாம். நோய்த்தொற்றின் தீவிரம் டெல்டாவில் இருந்த அளவுக்கு இல்லை. அதற்குக் காரணம், நம்மிடம் ஹெர்ட் இம்யூனிட்டி ஓரளவு உள்ளது.

உண்மையில், மற்ற வைரஸ் நோயால் நாம் பாதிக்கப்பட்டதால் நமக்கு ஹெர்ட் இம்யூனிட்டி உள்ளது. நாம் டெல்டா அலையைப் பார்த்திருக்கிறோம். அது பெரிய அலை. பிறகு, தடுப்பூசி போட்டு கொண்டோம். பின்னர், ஒமைக்ரான் அலை வந்தது. இருப்பினும், நாங்கள் பூஸ்டர் டோஸ் போடுவதை தொடர்ந்தோம்.

நாம் பல வழிகளில் அவர்களுடன் வேறுபட்டவர்களாக உள்ளோம். சீனாவில் நடப்பது இந்தியாவில் நடக்காமல் போகலாம். சீனாவில் பின்பற்றி வந்த பூஜ்ய கொரோனா கொள்கையே அங்கு கொரோனா பரவல் ஏற்பட காரணம். குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தி கொண்டதும் கொரோனா தீவிரமாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்" என்றார்.

கவலை:

சீனா கொரோனா பரவல் குறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதலை அதிகப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. 

வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், இதுகுறித்து பேசுகையில், "சீனாவில் மாறி வரும் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பு மிகவும் கவலை கொண்டுள்ளது. பலர் தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான வண்ணம் இருக்கிறது. 

நோயின் தீவிரத்தன்மை, மருத்துவமனைகளில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது போன்ற தகவல்களை தருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார். 

தலைப்பு செய்திகள்

Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget