மேலும் அறிய

Covishield Vaccine Dosage : 12-16 வாரத்துக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கோவிஷீல்ட்.. முறையானதா? தெரிந்துகொள்வோம்..

இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளியை பிரிட்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது பிரிட்டன் மாடல் தடுப்பூசி திட்டத்தை இந்தியாவும் பின்பற்ற இருக்கிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இனி 12-16 வாரகால இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளியை பிரிட்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது பிரிட்டன் மாடல் தடுப்பூசி திட்டத்தை இந்தியாவும் பின்பற்ற இருக்கிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கு முன்பு அறிவிக்கப்பட்டது போலவே 4-6 வாரகால இடைவெளி தொடர்ந்து அமலில் இருக்கும்.

ஆனால் 12 வாரகால இடைவெளி அறிவிப்பு தடுப்பூசி தட்டுப்பாட்டை மறைக்கத்தான் எனவும் அவ்வளவு நீண்டகால இடைவெளி தேவையில்லை எனவும் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நிபுணர்களிடமிருந்தே மறுப்புக்குரல்கள் எழுந்துவருகின்றன. ’கோவாக்சினுக்கு இவ்வாறுதான் 4-6 வாரகால இடைவெளி என அறிவித்தார்கள் ஆனால் அந்தத் தடுப்பூசியின் பரிசோதனை விதிமுறைகளின்படி 28 நாட்களுக்குள்ளேயே இரண்டாவது தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டிருந்தது’ என்கிறார்கள்.


Covishield Vaccine Dosage : 12-16 வாரத்துக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கோவிஷீல்ட்.. முறையானதா? தெரிந்துகொள்வோம்..

ஆனால் அரசு சொல்லும் இந்த பிரிட்டன் மாடல் தடுப்பூசி திட்டம் என்ன?

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கடந்த ஜனவரி மாத இறுதியில் பிரிட்டன் தடுப்பூசி போடும் புதிய திட்டத்தை கொண்டுவந்தது அதன்படி இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கான கால அவகாசத்தை 12 வாரங்களாக நீட்டித்தது.  கொரோனாவுக்கு எதிரான குறைந்தபட்ச பாதுகாப்பை எல்லோருக்கும் உறுதிசெய்யவும் முதல் டோஸ் தடுப்பூசி எல்லோருக்கும் கிடைப்பதை அதிகரிக்கவுமே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி சுமார் 70 சதவிகிதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.  ஆனால் பிரிட்டனுக்கு ஃபைசர் தடுப்பூசி விநியோகம் செய்யும் பயோ என்டெக் நிறுவனம் இரண்டு டோஸ்களுக்கும் இடையில் அதிகபட்சம் 3 வாரகால இடைவெளிதான் இருக்கவேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதேசமயம் தென்கொரியாவில் அண்மையில் ஃபைசர் ரகத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதல் டோஸ் போடப்பட்ட இரண்டு வாரங்களிலேயே அவை கொரோனா தொற்று பரவுவதை 90 சதவிகிதம் கட்டுப்படுத்துவது உறுதிசெய்யப்பட்டது. அதனால் முதல் டோஸ் செலுத்திய பிறகு காலம்தாழ்த்தியே இரண்டாவது டோஸ் செலுத்தலாம் என்பதை இந்தியாவும் தற்போது அமல்படுத்தியிருக்கிறது.


Covishield Vaccine Dosage : 12-16 வாரத்துக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கோவிஷீல்ட்.. முறையானதா? தெரிந்துகொள்வோம்..

ஆனால் கொரோனா வைரஸ் இனவகை அதிகம் இருக்கும் நாடுகளில் இந்த சதவிகிதம் மாறும் எனவும் பிரிட்டன் மாடல்தடுப்பூசி திட்டம் குறித்து விமர்சிக்கப்படுகிறது. கொரோனா முதல் இனவகை, இந்திய இனவகை, பிரிட்டன் இனவகை, தென் ஆப்பிரிக்க இனவகை என பல்வேறு இனவகைகள் இங்கே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளன. அந்தச் சூழலில் 12 வார இடைவெளிவிட்டுப் போடும் பிரிட்டன் மாடல் தடுப்பூசி திட்டம் நமக்குச் சரிப்பட்டு வருமா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


Covishield Vaccine Dosage : 12-16 வாரத்துக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கோவிஷீல்ட்.. முறையானதா? தெரிந்துகொள்வோம்..

இதுகுறித்து விளக்கமளிக்கிறார், மூத்த மருத்துவரும் நோய் எதிர்ப்புசக்தி நிபுணருமான டாக்டர் பிரிகேடியர் கே.சண்முகாநந்தன். அவர் கூறுகையில், ‘தடுப்பூசி பற்றாக்குறை இருப்பது உண்மைதான் ஆனால் அதனால்தான் அரசு கால அவகாசத்தை அதிகரித்துள்ளது எனச் சொல்லமுடியாது. அரசின் இந்த முடிவை ஒரு பரிணாமவளர்ச்சி அடைந்த முடிவு எனச் சொல்லலாம்.இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். அது இனிமேற்கொண்டு செய்யப்படும் ஆய்வுகளில்தான் தெரியவரும். மற்றபடி இரண்டாவது டோஸ் காலம்தாழ்த்திப் போடுவது சரியா என்பதை விட எல்லோருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி சென்று சேர்கிறதா என்பதை முதலில் உறுதிபடுத்த வேண்டியிருக்கிறது. கோவிஷீல்ட் முதல் டோஸ் கிட்டத்தட்ட எல்லா இனவகை கொரோனாவுக்கும் எதிராக செயல்படுகிறது. முதல் டோஸ் அதிகம்பேருக்குப் போடுவதால் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது, பாதிப்பு இருந்தாலும் அவர்களில் இறப்பவர்கள் எண்ணிக்கையும் குறைகிறது. அதனால் எல்லோருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி என்பதை முதலில் உறுதிசெய்யவேண்டியதுதான் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை விட முக்கியமானது’ என்கிறார்.

தடுப்பூசிதான் தீர்வு! தடுப்பூசி எல்லோருக்கும் கிடைப்பதுதான் தீர்வு!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை   - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை - 11 மணி வரை இன்று
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Embed widget