மேலும் அறிய

Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு

Cooking Oil: சமையல் எண்ணெயை இனி குறிப்பிட்ட 9 கொள்ளளவில் மட்டுமே பேக் செய்து விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Cooking Oil: சமையல் எண்ணெயை இனி 200 மில்லி தொடங்கி 20 லிட்டர் வரையிலான, 9 நிலையான பேக்குகளில் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

எண்ணெய் விற்பனைக்கு கட்டுப்பாடுகள்:

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சமையல் எண்ணெய் பேக்கேஜிங் விதிமுறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இனி நாட்டில் விற்பனை செய்யப்படும் சமையல் எண்ணெய்கள் ஒன்பது நிலையான கொள்ளளவில் மட்டுமே பேக் செய்யபட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயனர்கள்  வெவ்வேறு ப்ராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதை எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட அளவியல் கட்டமைப்பின் கீழ் உள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறையைத் திருத்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 நிலையான பேக்கேஜ் அளவுகள்:

திருத்தப்பட்ட விதிகளின்படி, சமையல் எண்ணெய்கள் பின்வரும் பேக்கேஜ் அளவுகளில் மட்டுமே இனி விற்பனை செய்யப்படும். அதாவது 200 மிலி, 500 மிலி, 1 லிட்டர், 2 லிட்டர், 3 லிட்டர், 4 லிட்டர், 5 லிட்டர், 15 லிட்டர் மற்றும் 20 லிட்டர். இந்த விதிமுறைகள், பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், எள் எண்ணெய், அரிசித் தவிடு எண்ணெய், பருத்தி விதை எண்ணெய் மற்றும் மக்காச்சோள எண்ணெய் உள்ளிட்ட பலவகையான சமையல் எண்ணெய்களுக்கும் பொருந்தும். மேலும், உற்பத்தியாளர்கள் எண்ணெயின் கனஅளவுடன் அதன் எடையையும் பேக்கேஜிங்கில் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, லிட்டரில் விற்கப்படும் பொருட்கள், அவற்றின் சமமான எடையை கிலோகிராமிலும் குறிப்பிட வேண்டும்.

சிறிய பேக்கட்களுக்கு விலக்கு

200 மில்லிக்கும் குறைவான சமையல் எண்ணெய் பொட்டலங்களுக்கும், சில சிறிய வகை சமையல் எண்ணெய்களுக்கும் புதிய பேக்கேஜ் விதிமுறைகளிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. சந்தையில் மலிவு விலையில் சிறிய பொட்டலங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே இந்த விலக்கின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாதங்கள் அவகாசம்

திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள உற்பத்தியாளர்கள், பேக்கேஜ் செய்பவர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய தரநிலைகளை முன்கூட்டியே பின்பற்ற விரும்பும் நிறுவனங்கள் உடனடியாக அதனை பின்பற்றலாம். இந்தியாவின் சமையல் எண்ணெய் துறையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்

குழப்பங்களுக்கான முற்றுப்புள்ளி

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், வழக்கத்திற்கு மாறான மற்றும் நிலையற்ற அளவுகளில் விற்கப்படும் எண்ணெய்களால், சமையலறைக்கு அத்தியாவசியமான ஒரு பொருளுக்கு எந்த பிராண்ட் சிறந்த மதிப்பை வழங்குகிறது என்பதை கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பேசும் இந்திய காய்கறி எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IVPA) தலைவர் சுதாகர் தேசாய், "தொழில்துறைக்கு சுதந்திரம் அளிப்பதற்காக தரப்படுத்தல் இல்லாத நிலை கொண்டுவரப்பட்டாலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நடைமுறை சந்தையைச் சிதைத்து, பல்வேறு அளவிலான பேக்கேஜ்கள் பெருக வழிவகுத்து, சந்தையில் பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தவிர்க்கும் வகையான நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Embed widget