மேலும் அறிய

Ayodhya Mosque : 100 படுக்கைகள்.. 1000 பேருக்கு உணவு.. அயோத்தி மசூதி.. அறக்கட்டளை வெளியிட்ட முக்கிய தகவல் என்ன தெரியுமா?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூதியை கட்டுவதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ள அறக்கட்டளை இது தொடர்பான தகவலை பகிர்ந்துள்ளது.

இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "மசூதி, மருத்துவமனை, சமூக சமையலறை, நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் வரைபடத்திற்கு இம்மாத இறுதிக்குள் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.

விரைவில் மசூதி கட்டும் பணியை தொடங்குவோம். தன்னிப்பூர் அயோத்தி மசூதியின் கட்டுமானப் பணிகள் 2023 டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும். அதே போல, ஐந்து ஏக்கர் மௌலவி அகமதுல்லா ஷா வளாகத்தில் மேல் உள்ள கட்டமைப்புகள் பின்னர் கட்டப்படும்" என்றார்.

நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த அயோத்தி வழக்கில், பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், உத்தரப் பிரதேசத்தில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆகஸ்ட் 2020இல், கோயிலின் பூமி பூஜை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்பட்டது. மேலும், ஜனவரி 2024இல் பக்தர்களுக்காக கோயில் திறக்கப்படும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கோயில் மற்றும் மசூதி கட்டி முடிக்கப்படும் நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மசூதி கட்டுவதற்காக உத்தரபிரதேச சன்னி மத்திய வக்பு வாரியத்தால் உருவாக்கப்பட்ட இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை, மருத்துவமனை, சமூக சமையலறை, நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றைக் கட்ட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் கூறுகையில், "முன்மொழியப்பட்ட கட்டமைப்புகளின் கட்டுமானத்தை அறக்கட்டளை ஒரே நேரத்தில் தொடங்கும். மசூதி அதன் சிறிய அளவு காரணமாக முதலில் முடிக்கப்படும். காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.

வளாகத்தில் மசூதி மற்றும் பிற கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனை 100 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு பின்னர் 200 படுக்கை வசதியாக மேம்படுத்தப்படும். 

சமுதாய சமையலறை ஆரம்பத்தில் தினசரி 1,000 பேருக்கு உணவு வழங்கும் திறனைக் கொண்டிருக்கும். பின்னர் 2,000 நபர்களுக்கு உணவளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகத்தை உருவாக்க அறக்கட்டளை முடிவு செய்தது" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget