மேலும் அறிய

சாதிவாரி கணக்கெடுப்பை விடுங்க.. சொத்துகளை பகிர்ந்தளிக்க கணக்கெடுப்பாம்.. ராகுல் காந்தி அடுத்த அதிரடி!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள மக்களிடையே சொத்துகளை பகிர்ந்தளிக்க சொத்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் 19ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை இந்த முறை வீழ்த்த வேண்டும் என நோக்கில் காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது.

ராகுல் காந்தி அடுத்த அதிரடி:

விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. கல்வியிலும் அரசின் வேலைவாய்ப்புகளிலும் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 50 சதவிகித இட ஒதுக்கீடு வரம்பு தளர்த்தப்படும் என அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளது

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றொரு முக்கிய வாக்குறுதியை வழங்கியுள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள மக்களிடையே சொத்துகளை பகிர்ந்தளிக்க சொத்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), பட்டியல் சாதியினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் சிறுபான்மையினர் எத்தனை பேர் என்பதை கண்டறிய முதலில் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்.

சொத்துகளை பகிர்ந்தளிக்க கணக்கெடுப்பு:

அதன்பிறகு, வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக சொத்துகளை பகிர்ந்தளிக்க சொத்து கணக்கெடுப்பு நடத்துவோம்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "அனைத்துத் துறைகளிலும் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்யும்.

மக்களுக்கு உரிய பங்கை அளிப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும். மொத்த மக்கள் தொகையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் 90 சதவீதம் உள்ளனர். ஆனால், அவர்களை அரசு வேலைகளில் பார்ப்பதில்லை. உண்மை என்னவென்றால், இந்த 90 சதவீத மக்களுக்கு உரிய பங்கு தரப்படவில்லை.

நாட்டின் நிர்வாகத்தை 90 ஐஏஎஸ் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களில் மூன்று பேர் மட்டுமே ஓபிசி, ஒருவர் ஆதிவாசி. மூன்று பேர் மட்டும் தலித்தாக உள்ளனர்" என்றார்.

தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்படும் என்றும் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள், சட்ட அதிகாரிகள், அரசு நிறுவனங்களின் வாரியங்களில் இயக்குநர்கள் போன்ற உயர் பதவிகளில் அதிகமான பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Embed widget