மேலும் அறிய

நாட்டை அதிரவிட்ட சோதனை.. கோடி கோடியாய் சிக்கிய பணம் யாருடையது? - வாயை திறந்த காங்கிரஸ் எம்.பி

வருமான வரித்துறை சோதனை நடந்து 10 நாள்கள் ஆன நிலையில், சிக்கிய பணம் குறித்து முதல்முறையாக மெளனம் கலைத்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு.

ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இந்திய வரலாற்றில் இதுவரை கைப்பற்றிடாத அளவுக்கு பணம் சிக்கியது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவின் வீடுகளிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. 

நாட்டை அதிரவிட்ட வருமான வரித்துறை ரெய்டு:

மேல்குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கோடி கணக்கிலான பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 நாள்கள், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பீரோக்கள் மற்றும் பெட்டிகள் நிரம்ப பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

நாட்டை திரும்பி பார்க்க வைத்த இந்த சோதனையில் மொத்தம் 351 கோடி  ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மீட்கப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்திய நோட்டு எண்ணும் இயந்திரம், பழுதடையும் அளவுக்கு பணம் சிக்கியிருக்கிறது. 

ஒடிசாவில் உள்ள போலங்கிர், சம்பல்பூர் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, லோஹர்டகா ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் உள்ள பௌத் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் (பிடிபிஎல்) நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. தீரஜ் சாஹு நடத்தி வரும் தொழிலுக்கும் தங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்திருந்தது.

சிக்கிய பணம் யாருடையது?

சோதனை நடந்து 10 நாள்கள் ஆன நிலையில், சிக்கிய பணம் குறித்து முதல்முறையாக மெளனம் கலைத்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு. சோதனையில் சிக்கிய பணம் நேரடியாக தனக்கு சொந்தமானது இல்லை என்றும் சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "சுமார் 35 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வரும் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை. நான் வேதனை அடைகிறேன். மீட்கப்பட்ட பணம் எனது நிறுவனத்துக்கு சொந்தமானது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

நாங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபான வியாபாரத்தில் உள்ளோம். நான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன். வணிகத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை. குடும்பத்தினரால் எனது தொழில் கவனிக்கப்படுகிறது. தொழில் எப்படி செல்கிறது என அவ்வப்போது விசாரிப்பேன்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் நிறுவனங்களுக்கு சொந்தமானது. தொழிலை வெளிப்படையாக செய்து வருகிறோம். சோதனையில் சிக்கிய பணம் மதுபானம் விற்று கிடைத்த பணம். ஏனெனில், மதுபான வியாபாரத்தில் கிடைத்த பணத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது எனது நிறுவனத்தின் பணம்.

பணம் என்னுடையது அல்ல. அது எனது குடும்பம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமானது. எனது குடும்ப உறுப்பினர்கள் தேவைப்பட்டால் வருமான வரித்துறைக்கு விளக்கம் அளிப்பார்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
திருவெண்காடு புதன்  கோயில் குடமுழுக்கு பெருவிழா: பக்தியில் மெய்சிலிர்க்க தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்..
திருவெண்காடு புதன்  கோயில் குடமுழுக்கு பெருவிழா: பக்தியில் மெய்சிலிர்க்க தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்..
நீங்க யாரு..? போக்குவரத்து அமைச்சரிடமே கேள்வி கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் - கரூரில் சம்பவம்
நீங்க யாரு..? போக்குவரத்து அமைச்சரிடமே கேள்வி கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் - கரூரில் சம்பவம்
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
Embed widget