மேலும் அறிய

அவமானப்படுத்துவதற்காக மதிப்பெண் கேட்பது, முத்திரை குத்துவதை நிறுத்தவேண்டும்.. இந்திய தலைமை நீதிபதி அதிரடி..

"நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கப்படுவதை நிறுத்துவதே சாதிய பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாகும்"

நாட்டின் முன்னணி கல்வி நிலைங்களில் ஒன்றாக இருப்பது ஐஐடி. இங்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. 

ஐஐடியில் சாதிய பாகுபாடு:

சமீபத்தில் கூட, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்த மாணவர்களிடையே தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள் தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது" என்றார்.

தலித், பழங்குடியின மாணவர்களுக்காக கொதித்தெழுந்த இந்திய தலைமை நீதிபதி:

நேற்று, ஹைதராபாத்தில் NALSAR சட்ட பல்கலைக்கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய டி.ஒய். சந்திரசூட், "பேராசிரியர் சுக்தேவ் தோரட், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர் தலித்கள் மற்றும் பழங்குடியினர் என்றும், அது நாம் கேள்வி கேட்க வேண்டிய ஒரு மாதிரியைக் உணர்த்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

75 ஆண்டுகளில், நாம் சிறந்த நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஆனால், அதற்கும் மேலாக நாம் அனுதாபம் உள்ள அமைப்புகளை உருவாக்க வேண்டும். நான் இதைப் பற்றி பேசுகிறேன். ஏனென்றால், பாகுபாடு பிரச்சினை நேரடியாக அனுதாபத்துடன் தொடர்புடையது" என்றார்.

அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான Black Lives Matter இயக்கம் எழுச்சி பெற்றபோது, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டனர். இதை குறிப்பிட்டு பேசிய சந்திரசூட், "சமூக உண்மைகளிலிருந்து நீதிபதிகள் வெட்கப்பட்டு ஓட முடியாது" என்றார்.

நீதிபதிகள் வெட்கப்பட்டு ஓட கூடாது:

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நீதிபதிகள் சமூக உண்மைகளிலிருந்து வெட்கப்பட முடியாது. நீதித்துறை உரையாடல் நிகழ்வுகள் உலகம் முழுவதும் பொதுவானது. ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலைக்குப் பிறகு Black Lives Matter இயக்கம் தோன்றியபோது, ​​அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளும் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர் .

கறுப்பின மக்களின் மோசமான வாழ்நிலை குறித்து அதில் பேசப்பட்டிருந்தது. கறுப்பின மக்கள் கல்வி கற்பதற்கு சிவில் உரிமை வழக்கறிஞர்கள் என்ன வேலை செய்தார்கள் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள் என ஹார்வர்ட் சட்ட பேராசிரியர் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியாவில் உள்ள நீதிபதிகள் நீதிமன்ற அறைக்கு உள்ளேயும் வெளியேயும் சமூகத்துடன் உரையாடுகிறார்கள்.

நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளைத் தவிர, நமது சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு கட்டமைப்பு சிக்கல்கள் மீது கவனம் செலுத்த முயற்சித்து வருகிறேன்" என்றார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூக பாகுபாடு குறித்து பேசிய அவர், "நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கப்படுவதை நிறுத்துவதே இதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாகும்.

இது சாதி அடிப்படையிலான பிரிவினைக்கு வழிவகுக்கும். நுழைவு மதிப்பெண்களின் அடிப்படையில் விடுதிகள் ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து தொடங்கலாம்.

சமூகப் பிரிவுகளுடன் சேர்த்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் பட்டியலை வெளியிடுவது, தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் மதிப்பெண் கேட்பது, அவர்களின் ஆங்கிலப் புலமையைக் கேலி செய்வது, திறமையற்றவர்கள் என்று முத்திரை குத்துவது போன்ற நடைமுறைகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.