மேலும் அறிய

ED Director: அமலாக்கத்துறை இயக்குநர் பணி நீட்டிப்பு விவகாரம்..மீண்டும் உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டிய மத்திய அரசு

அக்டோபர் 15ஆம் தேதி வரை, அமலாக்கத்துறை இயக்குநராக தொடர எஸ்.கே.மிஸ்ராவை அனுமதிக்கக் கோரி மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அமலாக்கத்துறையின் இயக்குநராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசு சமீபத்தில் நீட்டித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்தது. 

இருப்பினும், ஜூலை 31ஆம் தேதி வரையில், அந்த பதவியில் தொடர அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டும் இன்றி, அமலாக்கத்துறைக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியது. கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மீறும் விதமாக எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடிய மத்திய அரசு:

இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி வரை, அமலாக்கத்துறை இயக்குநராக தொடர எஸ்.கே.மிஸ்ராவை அனுமதிக்கக் கோரி மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

அதை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கின் விசாரணை ஜூலை 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளது. முன்னதாக, எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்கால நீட்டிப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், "சட்டத்தை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைச் செய்வது அவசியம் என்று உயர் அதிகாரம் கொண்ட குழு முடிவு செய்தால் மட்டுமே நீட்டிப்பு வழங்க முடியும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி நியமிக்கும் ஒருவர் அடங்கிய குழுவால் மட்டுமே நீட்டிப்பு வழங்க முடியும்.

அமலாக்கத்துறை இயக்குநருக்கு வழங்கப்பட்ட நீட்டிப்பு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், மிஸ்ராவுக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது" என தெரிவித்தது.

வழக்கின் விவரம்:

எஸ்.கே.மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெயா தாக்கூர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகாய் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். அதன்படி, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர் ஓய்வு பெறவிருந்தார். ஆனால், அவருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.

அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே நீட்டிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால், மிஸ்ராவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆனால், நவம்பர் 2021 இல், மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு அவசரச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கும் மத்திய அரசின் அதிகாரம் வலுப்படுத்தப்பட்டது. நவம்பர் 2022 இல், மிஸ்ராவின் பதவிக்காலம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG counselling: நீட் முறைகேடு -  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு, மாணவர்கள் ஷாக்
NEET UG counselling: நீட் முறைகேடு - இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு, மாணவர்கள் ஷாக்
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் அதிரடி
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் அதிரடி
Breaking News LIVE, July 6: சரணடைந்தவர்கள் கொலையாளிகள் அல்ல: திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Breaking News LIVE, July 6: சரணடைந்தவர்கள் கொலையாளிகள் அல்ல: திருமாவளவன் பரபரப்பு பேட்டி
BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அனைவரும் அமைதி காக்க வேண்டும் , நாளை சென்னை வருகிறேன் - மாயாவதி
BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அனைவரும் அமைதி காக்க வேண்டும் , நாளை சென்னை வருகிறேன் - மாயாவதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சிBahujan Samaj state president death | பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வெட்டிக் கொலை!POLICE தேடுதல் வேட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG counselling: நீட் முறைகேடு -  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு, மாணவர்கள் ஷாக்
NEET UG counselling: நீட் முறைகேடு - இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு, மாணவர்கள் ஷாக்
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் அதிரடி
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் அதிரடி
Breaking News LIVE, July 6: சரணடைந்தவர்கள் கொலையாளிகள் அல்ல: திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Breaking News LIVE, July 6: சரணடைந்தவர்கள் கொலையாளிகள் அல்ல: திருமாவளவன் பரபரப்பு பேட்டி
BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அனைவரும் அமைதி காக்க வேண்டும் , நாளை சென்னை வருகிறேன் - மாயாவதி
BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அனைவரும் அமைதி காக்க வேண்டும் , நாளை சென்னை வருகிறேன் - மாயாவதி
BSP Armstrong : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்..
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்..
Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
Samantha: சமந்தா விமர்சனங்களை ஒதுக்கி, பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார்.. மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Samantha: சமந்தா விமர்சனங்களை ஒதுக்கி, பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார்.. மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..
Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..
Embed widget