மேலும் அறிய

Manipur CBI: மணிப்பூர் பழங்குடி பெண்கள் விவகாரம்.. விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ..அதிரடி காட்டுமா?

பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் இந்தியா மட்டும் இன்றி, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வழக்கு விசாரணை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

மணிப்பூரில் குக்கி சோ பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டை உலுக்கி வருகிறது. ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பழங்குடியின பெண்கள், பின்னர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருந்தாலும், அதுதொடர்பான வீடியோ ஜூலை 19ஆம் தேதிதான் வெளியானது. மக்கள் மத்தியில் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்துதான், காவல்துறை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய சம்பவம்:

பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் இந்தியா மட்டும் இன்றி, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வழக்கு விசாரணை, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஏற்கனவே, 6 வழக்குகளை பதிவு செய்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக, 10 பேரை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு சிபிஐ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் நேற்று அளித்த விளக்கத்தில், "மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிஐ இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அத்தகைய நடவடிக்கை ஏஜென்சியால் இன்னும் எடுக்கப்படவில்லை. விசாரணை இன்னும் தொடர்கிறது. மேலும், இதுவரை மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட எவரையும் நாங்கள் எங்கள் காவலில் எடுக்கவில்லை" என்றார்.

முடங்கி போன நாடாளுமன்றம்:

ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் மணிப்பூர் பக்கம் திரும்பியுள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முடங்கி போயுள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதேபோல, மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மணிப்பூர் குறித்து குறுகிய கால விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடி அரசுக்கு எதிராக இந்தியா (எதிர்க்கட்சிகள் கூட்டணி) கூட்டணி சார்பில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டாலும் அதன் மீதான விவாதம் எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக விவாதத்திற்கு ஏற்று கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: சியுஇடி தேர்விலும் குளறுபடி:
Rahul Gandhi: சியுஇடி தேர்விலும் குளறுபடி: "ஒரு தேர்வு கூட ஒழுங்கா நடத்தல" மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!
பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. கருணைக்கொலை பண்ணுங்க.. கணவர் மனு!
பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. கருணைக்கொலை பண்ணுங்க.. கணவர் மனு!
Top 10 Headlines: வைகாசி விசாகம் கொண்டாட்டம்.. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 Headlines: வைகாசி விசாகம் கொண்டாட்டம்.. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
PPF கணக்கில் அதிக வட்டி பெற வேண்டுமா? ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் பணம் செலுத்துங்கள்.
PPF கணக்கில் அதிக வட்டி பெற வேண்டுமா? ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் பணம் செலுத்துங்கள்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget