Breaking LIVE : குஜராத் மாநில சட்ட பேரவை முதற்கட்ட தேர்தல் நிறைவு...57.60 சதவீத வாக்குப்பதிவு
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
குஜராத் மாநில சட்ட பேரவை முதற்கட்ட தேர்தல் நிறைவு...57.60 சதவீத வாக்குப்பதிவு
குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தல் முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 57.60 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக, இந்திய அரசின் அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது
#GujaratElections2022 :
— All India Radio News (@airnewsalerts) December 1, 2022
57.60% voter turnout registered till 5.00 P.M. #GujaratAssemblyPolls | #PollsWithAIR | #GujaratElections pic.twitter.com/J576kqOQ3n
சென்னை பள்ளிகளுக்கு நாளை மறுநாள் வேலை நாள்
சென்னையில் வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலைநாள் என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
அஃப்தாப் அமீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை நிறைவு..
ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அஃப்தாப் அமீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை டெல்லியில் நிறைவடைந்தது.
பாலிகிராஃப் சோதனையில் ஷ்ரத்தாவை கொன்றதை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த சோதனை முடிவடைந்தது
அஃப்தாப் அமீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை நிறைவு..
ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அஃப்தாப் அமீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை டெல்லியில் நிறைவடைந்தது.
பாலிகிராஃப் சோதனையில் ஷ்ரத்தாவை கொன்றதை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த சோதனை முடிவடைந்தது
காளைகள் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் - தமிழக அரசு
காளைகள் ஒன்றரை ஆண்டு முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். 6 வயதுக்கு பிறகு காளைகளை வீடுகளில் வளர்ப்பர். உடற்தகுதி, தோற்றத்தை வைத்தே லட்சத்துக்கு மேலான பணம் கொடுத்து காளை வாங்கப்படுகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருப்பது போன்று காளைகளை கொல்லும் வழக்கம் கிடையாது என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.