மேலும் அறிய

Breaking News LIVE: சென்னையில் 6 வாரத்தில் ரூ.5 கோடி அபராதம் வசூல்

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: சென்னையில் 6 வாரத்தில் ரூ.5 கோடி அபராதம் வசூல்

Background

சென்னையில் தொடர்ந்து 300வது நாளாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 

இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால்  பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.

தொடர்ந்து மாறாத எரிபொருள் விலை 

சென்னையில் இன்று (மார்ச்.13) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 295வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 

இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  

இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

18:18 PM (IST)  •  13 Mar 2023

Breaking News LIVE: சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கேலரிக்குகருணாநிதியின் பெயர் - தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி

19:32 PM (IST)  •  13 Mar 2023

Breaking News LIVE: அபராதத்தை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு !

இறக்குமதி சொகுசு கார் விவகராத்தில் அபராதத்தை எதிர்த்து இசையமைப்பாளார் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசராட்டி சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதமானது. இதற்கு ரூ.11.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு.

17:42 PM (IST)  •  13 Mar 2023

Breaking News LIVE: சென்னையில் 6 வாரத்தில் ரூ.5 கோடி அபராதம் வசூல்

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 6 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

17:40 PM (IST)  •  13 Mar 2023

Breaking News LIVEசென்னையில் 6 வாரத்தில் ரூ.5 கோடி வசூல்

சென்னையில் மது போதையும் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 6 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

17:35 PM (IST)  •  13 Mar 2023

Breaking News LIVE: இட ஒதுக்கீடு கொள்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசு வேலைக்காக போலி சாதிச்சான்று அளித்து ஒட ஒதுக்கீடு கொள்கைகை சுரண்டுவோரை தண்டிக்காலம் விட முடியாது - சென்னை உயர்நீதி மன்றம். பாலசுந்தரத்தின் சாதிச்சான்றை ரத்து செய்த உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
Part Time Job: ”பார்டைம் ஜாப் பார்த்தால் போதும் பணம் கொட்டும்” - மதுரையில் கோடிக்கணக்கில் மோசடி!
Part Time Job: ”பார்டைம் ஜாப் பார்த்தால் போதும் பணம் கொட்டும்” - மதுரையில் கோடிக்கணக்கில் மோசடி!
Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
Part Time Job: ”பார்டைம் ஜாப் பார்த்தால் போதும் பணம் கொட்டும்” - மதுரையில் கோடிக்கணக்கில் மோசடி!
Part Time Job: ”பார்டைம் ஜாப் பார்த்தால் போதும் பணம் கொட்டும்” - மதுரையில் கோடிக்கணக்கில் மோசடி!
Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
Baba Siddique: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது
வாழை மரத்தை வைத்து நடந்த நூதன திருவிழா பற்றி தெரியுமா? களைக்கட்டிய காஞ்சிபுரம் கோயில்கள்..
வாழை மரத்தை வைத்து நடந்த நூதன திருவிழா பற்றி தெரியுமா? களைக்கட்டிய காஞ்சிபுரம் கோயில்கள்..
Breaking News LIVE: பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
Breaking News LIVE: பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
IND Vs AUS W: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? உலகக் கோப்பை லீகில் இன்று மோதல்..!
IND Vs AUS W: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? உலகக் கோப்பை லீகில் இன்று மோதல்..!
Nalla Neram Today:நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today:நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget