Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- மக்களவை முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாளையுடன் பரப்புரை ஓய்கிறது. வெயில் காரணமாக கூடுதலாக ஒரு மணி நேரம் கால அவகாசம் அளித்து மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பரப்புரை முடியவுள்ள நிலையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என முக்கிய தலைவர்கள் பலரும் தமிழ்நாட்டில் இன்று பரப்புரை மேற்கொள்கின்றனர்.
- ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கத்தில் கொல்கத்தா விளையாடும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். மே 15 ஆம் தேதியுடன் பதவியில் இருந்து விலகுவதாகவும், லாரன்ஸ் வோங் அடுத்த பிரதமராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளா. 70 வயதிற்கு மேல் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
- தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள காங்கேர் பகுதியில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை ரூ.3.77 கோடி பணம் பறிமுதல்
ரூ.3.54 கோடிக்கான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கலால் துறையில் 530 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 5 பேர் மீது ரூ.2 லட்ச ரூபாய் வேட்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வேண்டுகோள்
Breaking Tamil LIVE: பெரம்பலூரில் பாரிவேந்தருக்கு ஆதரவாக ஜே.பி.நட்டா பரப்புரை
பெரம்பலூரில் பாஜக வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
Lok Sabha Election 2024: மின்னணு வாக்குப்பதிவு ; உச்சநீதிமன்றம் உத்தரவு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Vandalur Zoo : ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தலை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுகிறது
Vandalur Zoo : ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தலை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா, பார்வையாளர்களுக்கு மூடப்படுகிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets