மேலும் அறிய

Breaking News Live : பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

Key Events
breaking news live on 25th june 2022 latest news updates Breaking News Live : பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது
ப்ரேக்கிங் செய்திகள்

Background

மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைக் கண்காணித்து, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மேல்நிலைப் பள்ளிகள்‌ அங்கீகாரம்‌ வழங்கும்‌ விதிகளில்‌, மேல்நிலைப்பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையின்‌போது, அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விதிகள்‌ பாடப்பிரிவு வாரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2022-2023ஆம்‌ கல்வியாண்டிலும்‌ மேல்நிலைக்‌ கல்விக்கான மாணவர்‌ சேர்க்கை நடைபெறும்‌பொழுது, மாநிலத்தின்‌ அதிகார வரம்பிற்குள்‌ செயல்படும்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளிலும்‌ (சிறுபான்மை கல்வி நிலையங்கள்‌ நீங்கலாக) பழங்குடியினர்‌, ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும்‌ விகிதத்தில்‌ கடைபிடிக்கப்பட
வேண்டும்‌.


மேற்கண்ட அட்டவணையில்‌ தெரிவித்துள்ளவாறு மாணவர்‌ சேர்க்கையின்போது பொதுப் பிரிவினருக்கான 31% இடத்திற்கான பட்டியல்‌ முதலில்‌ தயாரிக்கப்பட வேண்டும்‌. இதில்‌ மாணவர்கள்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும்‌, பொதுப்பிரிவினர்‌, ஆதி திராவிடர், பழங்குடியினர்‌, பிற்படுத்தப்பட்ட பிரிவினர்‌என்ற எவ்விதப் பாகுபாடின்றித் தயாரித்திடவும்‌ அறிவுறுத்தப்படுகிறது. அதன்‌ பின்னர்‌ அந்தந்தப் பிரிவுக்கான பட்டியல்‌ தயாரிக்கப்பட வேண்டும்‌.

மாநிலத்தின்‌ அதிகாரவரம்பிற்குள்‌ செயல்படும்‌ அனைத்து வகைப் பள்ளிகளிலும்‌ (சிறுபான்மை கல்வி நிலையங்கள்‌ நீங்கலாக) பாடப்‌ பிரிவு வாரியாக மேற்கூறப்பட்ட விகிதத்தில்‌ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர்‌ சேர்க்கை நடைபெற வேண்டும்‌ என அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது. 

அனைத்துப்‌ பள்ளிகளுக்கும்‌ இந்த செயல்முறை ஆணையினை அனுப்பி ஒப்பம்‌ பெற்று தங்கள்‌ கோப்பில்‌ வைக்குமாறும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. மேலும்‌, மேற்கூறியவாறு அனைத்துப் பள்ளிகளிலும்‌ மாணவர்‌ சேர்க்கையை உறுதி செய்யுமாறும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையர் தப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் இருந்தபோதும் பெரும்பாலான பள்ளிகள், இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றவில்லை என்று புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

21:04 PM (IST)  •  25 Jun 2022

பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் முன் விரோதத்தால் ஞானப்பிரகாஷ் என்பவரை, கொலை செய்யும் நோக்கில்  பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாவனர்களில் 6 பேர் பள்ளி மாணவர்கள் என தகவல். மேலும் அவர்களிடம் கத்திகள் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

19:15 PM (IST)  •  25 Jun 2022

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம்-ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget