மேலும் அறிய

பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை... கர்நாடகாவில் தொடரும் பதற்றம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

பாஜக தலைமையிலான மாநில அரசு கட்சித் தொண்டர்களின் உயிரை பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறி, கர்நாடகாவின் பல பகுதிகளைச் சேர்ந்த இளைஞரணியினர் கூட்டமாக கட்சியிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் பாஜக இளைஞரணியைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

வெடித்த போராட்டம்


பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை... கர்நாடகாவில் தொடரும் பதற்றம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

கர்நாடகாவின் தட்சின் கன்னடா மாவட்டத்தில் நேற்றிரவு பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு வெட்டிக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கர்நாடகாவின் பல பகுதிகளில் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்துள்ளன.

இந்நிலையில், பாஜக தலைமையிலான மாநில அரசு கட்சித் தொண்டர்களின் உயிரை பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறி, கர்நாடகாவின் பல பகுதிகளைச் சேர்ந்த இளைஞரணியினர் கூட்டமாக கட்சியிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

மாநில பாஜக தலைவர் கார் சுற்றிவளைப்பு

மேலும், முன்னதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலின் காரை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து அவரை சரமாரியாக தாக்கிய காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

 

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்

இந்நிலையில் 32 வயது பிரவீன் நெட்டாரு நேற்றிரவு தனது கோழிக்கடையை மூடிவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரைத் தாக்கியதாகவும், தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீனை உள்ளூர்வாசிகள் உதவியுடன் மீட்டதாகவும், தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

6 குழுக்கள் அமைப்பு

இந்நிலையில், கொலையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க ஆறு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 15 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுதாகவும், கேரளா, மடிகேரி மற்றும் ஹாசன் ஆகிய பகுதிகளுக்கு மூன்று காவலர் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னதாக கர்நாடகா விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து பெல்லாரே, சுல்லியா பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.

காவல் துறை பாதுகாப்பு

இன்று காலை பிரவீனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கானோர் திரண்ட நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளே கொலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

 

இந்நிலையில், முன்னதாக பதற்றம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தலைவர் ருஷிகேஷ் சோனாய் தெரிவித்துள்ளார்.

மேலும், கேரள பதிவு எண் கொண்ட வண்டியில் மூன்று பேர் வந்து பிரவீனைத் தாக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகிறோம்," எனவும் மாவட்டக் காவல் துறை தலைவர் ருஷிகேஷ் சோனாய் தெரிவித்துள்ளார்.

பசவராஜ் பொம்மை கண்டனம்

இந்தத் தாக்குதலுக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விசாரணை துரிதகதியில் நடத்தப்பட்டு பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இச்சூழலில் உடுப்பி , தட்சிண கன்னடா மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளும் உணவகங்களும்  மூடப்பட்டுள்ள நிலையில், சில பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget