ரூ.50 கோடிக்கு நாயா!..வீட்டுக்கே சென்ற ED: கடைசியில்தான் டிவிஸ்ட்!
Bengaluru 50 Crore Dog: பெங்களூருவைச் சேர்ந்த நபர், அரிய வகை நாயை ரூ. 50 கோடிக்கு வாங்கியதாக தகவல் பெரிதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில், அது பொய்யானது என தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்கிற நபர், கேடபாம்ப் ஒகாமி என்ற அரிய இனத்தை, வெளிநாட்டில் இருந்து ரூ.50 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. 51 வயதான சதீஷ், அரிய வகையான செல்லப்பிராணிகள் வளர்ப்பு தொழிலுக்கு பெயர் பெற்றவர் என கூறப்படுகிறது. இந்த நாயானது, ஓநாய் மட்டும் காக்கேசியன் ஜெர்மன் செப்பர்டு நாய் ஆகியவற்றின் கலப்பினத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது.
இதை, புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, இந்தப் பதிவானது, சமூக வலைதளங்களில் டிரெண்டாக ஆரம்பித்தது. இதை பார்த்த பலரும், இவர்தான் அதிக மதிப்புள்ள வெளிநாட்டு நாய் வளர்க்க கூடிய நபர் என்றும் அழைத்தனர்.
Also Read: வியக்கவைக்கும் படங்கள்! விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்ட இந்தியா
இதனை தொடர்ந்து ரூ.50 கோடி மதிப்புள்ள நாயுடன் எடுத்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அமலாக்க இயக்குநரகம் (ED) அவர் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த அதிக விலை மதிப்புள்ள நாய் வாங்கியதில் ஹவாலா பரிவர்த்தனைகள் அல்லது சட்டவிரோத பணப் புழக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அமலாக்கத்துறை அவரது வீட்டிற்கே சென்றதாக கூறப்படுகிறது.
விசாரணையின் போது, நாயை ஒப்படைக்குமாறு ED சதீஷிடம் கேட்டது. இருப்பினும், அந்த நாய் தற்போது ஒரு நண்பரிடம் இருப்பதாக அவர் அதிகாரிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் சதீஷ் அவர்களிடம் அது தன்னுடையது இல்லை என்றும் அவர், நாயுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரின் வங்கி கணக்கையும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும், ஆனால் அதற்கான முகாந்திரம் இல்லை எனவும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: ஐ.நாவுக்கு கடைசி முகலாய வாரிசு கடிதம்: ஔரங்கசீப் கல்லறையை காப்பாற்றுங்கள்..என்ன நடந்தது?
இதையடுத்து, சதீஷ் பெரும் பணம் படைத்தவர் இல்லை என்றும், அந்த நாய் ரூ. 1 லட்சம் கூட இருக்காது எனவும் தெரிய வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இதை சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காகவே பதிவிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அமலாக்கத் துறையினர் அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பார்வைகளை பெறுவதற்காகவே, சிலர் வைரலாகும் செயல்களை செய்கின்றனர். இந்நிலையில், இவரும், அதிக கவன ஈர்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காகவே, பொய்யான தகவலை நாயை வைத்து தெரிவித்தது, அமலாக்கத்துறை விசாரணை வரை சென்றுவிட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

