என்னா மனுஷன்யா? 70 பேரை லேஆஃப் செய்த சிஇஓ; 67 பேருக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக்கொடுத்து உருக்கம்!
’'18 மாதங்களுக்கு முன்பு 70 ஊழியர்களை லே ஆஃப் செய்தோம். எங்களுக்கே அது தவறு என்பது தெரிந்தது. எனினும் அப்போது வேறு வழி இல்லை.''

பெங்களூருவைச் சேர்ந்த ஓகே கிரெடிட் என்னும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி , தன் நிறுவனத்தில் 70 பேரைப் பணிநீக்கம் செய்தநிலையில், அதில் 67பேருக்கு வெவ்வேறு நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக லிங்க்டு இன் சமூக வலைதளத்தில் ஓகே கிரெடிட் என்னும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷ் போகர்னா ஒரு நெகிழ்ச்சிகரமான பதிவை இட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’18 மாதங்களுக்கு முன்பு 70 ஊழியர்களை லே ஆஃப் செய்தோம். எங்களுக்கே அது தவறு என்பது தெரிந்தது. எனினும் அப்போது வேறு வழி இல்லை. இர் மிகவும் கடினமான சூழலில் அந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது.
ஏன் இந்த முடிவு எடுத்தோம்?
அவர்களைத் தனிப்பட்ட வகையில் அழைத்துப் பேசினோம். ஏன் இந்த முடிவு எடுத்தோம்? ஏன் இந்தப் பிழை? எவ்வாறு அவர்களுக்கு உதவுவோம்?என்றெல்லாம் விளக்கினோம்.
அவர்களுக்கு 3 மாத நோட்டீஸ் காலம் கொடுத்தோம்.. பிற நிறுவனங்களுக்கான பரிந்துரைகள், அறிமுகங்கள், என எங்களால் உதவக்கூடிய அனைத்தையும் வழங்கினோம்.
67 பேருக்கு வேலை
3 மாத கால நோட்டீஸ் பீரியட் முடிவதற்கு முன்பே 67 பேருக்கு வேலை கிடைத்தது. அவ்வாறு கிடைக்காத 3 பேருக்கு, 2 மாத கூடுதல் சம்பளத்தை வழங்கினோம்..
ஆனால் இப்போதெல்லாம் என்ன நடக்கிறது என்று பாருங்கள் - இந்த ஆண்டு 120,000-க்கும் மேற்பட்டோர் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பலருக்கு முறையான அறிவிப்பு கூட வரவில்லை. சிலர் மின்னஞ்சல் மூலம் தெரிந்து கொண்டனர்.
மனிதாபிமானம் இல்லாத செயல்
சிலர் வேலை செய்து கொண்டிருக்கும்போதே திடீரென நீக்கப்பட்டனர். அது மனிதாபிமானமற்றது. பணி நீக்கங்கள் நடக்கின்றன. என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் அவற்றை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பது உங்களைப் பற்றி பிறருக்குத் தெரிவிக்கிறது.
நீங்கள் ஒருவரை பணியமர்த்தும்போது "குடும்பம்" என்று அழைத்தால், அவர்களை விடுவிக்கும்போதும் குடும்பமாக நடத்துங்கள்’’.
இவ்வாறு ஹர்ஷ் போகர்னா பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

