மேலும் அறிய

Vijay Mallya : விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியிடம் ரூ.18,000  கோடி மீட்பு : உச்சநீதிமன்றத்தில் சொன்ன மத்திய அரசு..

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு மேல் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தற்போது லண்டனில் உள்ளார்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து ரூ.18,000  கோடி மீட்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ஜூலை 2021 நிலவரப்படி, விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்களை விற்ற வங்கிகள் ரூ.13,109 கோடியை மீட்டுள்ளன.

இந்த நிலையில், தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரிடமிருந்து வங்கிகள் ரூ.18,000 கோடியை மீட்டுவிட்டதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். மல்லையா, நீரவ் மோடி மற்றும் சோக்ஸிக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் மதிப்பு இப்போது ₹67,000 கோடி என்று நீதிபதி ஏஎம் கான்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்சில் மேத்தா தெரிவித்தார்.

‘விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரின் வழக்குகளில் அமலாக்க இயக்குனரகம்  பண மோசடி சட்டத்தின் கீழ் நீதிமன்றங்கள் இயற்றிய உத்தரவுகளின் காரணமாக ரூ.18,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிந்தது’ என்று மேத்தா கூறினார்.

டிசம்பரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஜூலை மாத நிலவரப்படி, மூவரின் சொத்துக்களை விற்று வங்கிகள் ரூ13,109 கோடியை மீட்டுள்ளன. அந்த நேரத்தில் மீட்டெடுப்புகளின் சமீபத்திய தவணை மதிப்பு ரூ.792 கோடியாக இருந்தது என்று கூறினார்.

மத்திய ஏஜென்சியின் அதிகாரங்களைத் தேடுதல், பறிமுதல் செய்தல், விசாரணை மற்றும் குற்றத்தின் வருமானத்தை இணைத்தல் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கும் போது மேத்தாவின் அறிக்கை வெளியிடப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வாதிடுவதற்கான கடைசி வாய்ப்புக்காக மல்லையா நாளை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு மேல் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தற்போது லண்டனில் உள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வழக்கில் சோக்ஸி தேடப்பட்டு வருகிறார். அவர் தற்போது கரீபியன் தீவான ஆன்டிகுவாவில் இருக்கிறார். டொமினிகாவிலிருந்து ஜாமீன் பெற்ற பிறகு, இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டார். நிரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பான மோசடி வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு நிலுவையில் உள்ள அவரும் லண்டனில் உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget