மேலும் அறிய

"தீராக்காதல்" உயிலில் எழுதி வைத்த கடைசி ஆசை.. நெகிழ வைக்கும் ஆஸ்திரேலியா தாத்தா!  

இந்தியா மீது தீராக்காதல் கொண்டு, தான் பிறந்த மண்ணை விட்டுவிட்டு இந்தியாவில் தனது உடல் புதைக்கப்பட வேண்டும் என உயில் எழுதி வைத்த டொனால்ட் சாம்ஸின் கதை அனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 91 வயது முதியவர் ஒருவர், இந்தியா மீதான தீராக்காதல் காரணமாக இறந்த பிறகு தன்னுடைய உடல் இந்தியாவில் புதைக்கப்பட வேண்டும் என உயிலில் கோரிக்கை விடுத்தார். முதியவரின் கோரிக்கையை ஏற்று அவர் இறப்பை தொடர்ந்து, அவரின் உடல் இந்திய கிறிஸ்தவ கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளது.

"இந்தியா மீது தீராக்காதல்"

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் டொனால்ட் சாம்ஸ். இவர், ஆஸ்திரேலிய தூதரகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி. பிரிட்டிஷ் ஆட்சியின் போது இவரது தந்தை அசாமில் பணிபுரிந்தார். தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, டொனால்ட் சாம்ஸ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அசாமுக்கு செல்வார்.

தனது அனைத்து பயணங்களின் போதும், கொல்கத்தாவிலிருந்து பாட்னாவுக்கு கங்கை வழியாக கப்பலில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தியா மீது பேரன்பு கொண்டவராக இருந்துள்ளார். எவ்வளவு அன்பு இருக்கிறது என்றால், தனது இறுதிச் சடங்குகளை இந்தியாவில் செய்யுமாறு உயிலில் எழுதி வைக்கும் அளவுக்கு உள்ளது.

நெகிழ வைக்கும் ஆஸ்திரேலியா தாத்தா:

இந்த நிலையில், 12ஆவது முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் டொனால்ட் சாம்ஸ். 42 பேர் கொண்ட ஆஸ்திரேலிய குழுவுடன், கங்கை நதியில் ஒரு கப்பல் மூலம் சுல்தான் கஞ்சிலிருந்து பாட்னாவுக்குப் பயணம் செய்திருக்கிறார் சாம்ஸ்.

பயணத்தின் போது, ​​சாம்ஸ் நோய்வாய்ப்பட்டு, முங்கரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மாவட்ட நிர்வாகம் அவரது மரணம் குறித்து இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது.

ஆஸ்திரேலிய தூதரகம் மற்றும் அவரது மனைவி ஆலிஸ் சாம்ஸின் ஒப்புதலைத் தொடர்ந்து, அவரை முங்கரிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலிய தூதரகத்தின் அனுமதியுடனும், அவரது மனைவியின் வேண்டுகோளின் பேரிலும், கிறிஸ்தவ முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்த ஒரு பாதிரியார் ஏற்பாடு செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை செய்யப்படாமல், இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. சுரம்பாவில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் முழு கிறிஸ்தவ முறைப்படி டொனால்ட் சாம்ஸ் அடக்கம் செய்யப்பட்டார்.

இந்தியா மீது தீராக்காதல் கொண்டு, தான் பிறந்த மண்ணை விட்டுவிட்டு இந்தியாவில் தனது உடல் புதைக்கப்பட வேண்டும் என உயில் எழுதி வைத்த டொனால்ட் சாம்ஸின் கதை அனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget