மேலும் அறிய

Assam Newborn Baby : அசாமில் 5.2 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை

அசாம் மாநிலத்தில் 5.2 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாநிலத்திலே அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்ற சாதனையை படைத்துள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பதல்தாஸ். இவரது மனைவி ஜெயாதாஸ். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஜெயாதாஸ் மீண்டும் கருவுற்றிருந்தார். அந்த மாநிலத்தின் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு வந்தார் ஜெயதாஸ். அவருக்கு கடந்த மே மாதம் 29-ந் தேதி குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் முன்கூட்டியே அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் மருத்துவமனையில் குறிப்பிட்ட தேதியில் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களுககு முன்பு ஜெயதாஸ் கசார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த செவ்வாய்கிழமை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது, அழகான ஆண்குழந்தை பிறந்தது.


Assam Newborn Baby : அசாமில் 5.2 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை

அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக, பிறக்கும் குழந்தைகள் 2.5 கிலோ இருப்பது வழக்கம். ஆனால், இந்த குழந்தை 5.2 கிலோ இருந்தது. கடந்த காலங்களில் அசாம் மாநிலத்தில் 4 கிலோ எடையுடன் குழந்தை பிறந்ததே அதிகபட்ச எடையுடன் பிறந்த குழந்தையாக இருந்தது. இந்த நிலையில், தற்போது 5.2 கிலோ எடையுடன் குழந்தை பிறந்துள்ளதால், அசாம் மாநிலத்திலே பிறக்கும்போது அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்ற சாதனையை இந்த குழந்தை படைத்துள்ளது.

பதல்தாஸ் மற்றும் ஜெயதாஸ் தம்பதியினருக்கு இந்த குழந்தை இரண்டாவது குழந்தை ஆகும். இவர்களுக்கு முதலில் பிறந்த குழந்தை 3.8 கிலோ கிராம் எடையுடன் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, 5.2 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையின் தந்தை பதல்தாஸ் கூறும்போது, எங்களது முதல் குழந்தையும் 4 கிலோ எடையுடன் பிறந்தது. அது ஒரு கடினமான சூழல். கொரோனா தொற்றிற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்து வருவதால், எனது மனைவியை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வருவதில் சிறிய தயக்கம் இருந்தது. ஆனாலும், இறுதியாக மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்தோம். எனது மனைவியையும், குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவர்களுக்க நன்றி என்று கூறினார்.

இதுதொடர்பாக, மருத்துவர்கள் கூறும்போது பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு 38வது வாரம் முதல் 42வது வாரத்திற்குள் குழந்தை பிறந்துவிடும். ஆனால், ஜெயதாசை மருத்துவமனையில் அனுமதிக்க தாமதப்படுத்திவிட்டனர். இருப்பினும் நல்ல முறையில் தாயையும், குழந்தையையும் காப்பாற்றி விட்டோம் என்றார்.

மேலும் படிக்க : Telangana Lockdown : லாக்டவுனை திரும்பப்பெற்றது தெலங்கானா! - முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவிப்பு

 

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
Embed widget