மேலும் அறிய

Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?

Anura Kumara Dissanayake: இலங்கையின் 9வது அதிபராக அனுரா குமார திசநாயகே அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

Anura Kumara Dissanayake: அனுரா குமார திசநாயகேவின், இந்தியா மீதான நிலைப்பாடு என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

அதிபராக பொறுப்பேற்ற அனுரா குமார திசநாயகே

பரபரப்பாக நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். அதைதொடர்ந்து, இன்று அவருக்கு கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில்,  இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஜெயந்த் ஜெயசூர்யா பதவிப்பிரமணம் செய்து வைத்தார். மக்களால் ஏகேடி என அறியப்படும் அனுரா குமார திசநாயகே, இலங்கையின் முதல் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றும் அதிபராவார். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள அவர் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஏகேடி-யின் ஆட்சிக்காலத்தில், இந்தியா - இலங்கை இடையேயான உறவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

இலங்கையின் புவிசார் முக்கியத்துவம்:

இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் இருப்பிடம், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது, குறிப்பாக இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு விரிவடைவதற்கு முக்கிய தளமாகவும் பார்க்கப்படுகிறது. இலங்கை உடன் நெருங்கிய உறவை மேற்கொள்ள இந்தியா முயன்றாலும், சீனா இலங்கையின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது. 2006 முதல் 2022 வரை, உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 11.2 பில்லியன் டாலர் மானியங்கள் மற்றும் கடன்களை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது.

இதனிடையே, இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்று, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து உள்ளது. இந்த நடவடிக்கை துறைமுகத்தை ராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை  இந்தியாவிற்கு எழுப்பியுள்ளது, . 

ஏகேடி சீனாவிற்கு ஆதரவா?

இத்தகைய சூழலில் இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள திசநாயகே, தன்ன்னுடன் ஒத்துப்போகும் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றும் சீனா உடன் நெருங்கி பழகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ”இந்தியா எங்களது அண்டை நாடு மற்றும் சக்தி வாய்ந்த நாடும் ஆகும். இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து வல்லரசுகளுடனும் நல்ல உறவை தொடர ஏகேடி விரும்புகிறார்” என அவரது ஜெவிபி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏகேடி-யின் நிலைப்பாடு:

ஜெவிபி கட்சி கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை வலுவாக வெளிப்படுத்தினாலும், தற்போதைய சூழலில் ஏகேடி இந்தியா உடன் நெருக்கம் காட்டவே விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உணர்த்தும் விதமாகவே கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், வேறு ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த, எங்களது வான் மற்றும் தரை பரப்பை பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என ஏகேடி தெரிவித்து இருந்தார். மேலும், தனித்து இருந்தால் இலங்கையால் ஸ்திரத்தன்மையை பெற முடியாது என்றும்,  இந்தியா போன்ற வலிமையான நாட்டிடம் இருந்து தொழில்நுட்பம் போன்ற பல நன்மைகளை பெற முடியும் என்றும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த கால அரசியல் நிலைப்பாட்டை தாண்டி நாட்டை நிலைப்படுத்த, இந்தியாவுடன் நெருங்கி பழக விரும்புவதாக வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

அதானி குழுமத்திற்கு எதிர்ப்பு:

இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சாரத் திட்டம், நாட்டின் ஆற்றல் இறையாண்மையை மீறுவதாகவும், சுற்றுச்சூழல் பிரச்சினைகள எழுப்புவதாகவும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளார். இதேபோன்று, ஹம்பந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் போன்ற சில சீன முதன்மைத் திட்டங்களை நிறைவேற்றுவதில், ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என திசநாயகே கவலை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
Embed widget