மேலும் அறிய

நவீன இந்திய வரலாற்றில் இந்த நான்கு குஜராத்திகள் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.. அமித்ஷா பேச்சு..!

"குஜராத்தி சமூகம் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. குஜராத்தின் சாரத்தை பராமரித்து, அதன் கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாத்து, அதை முன்னெடுத்துச் சென்றுள்ளது"

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், நரேந்திர மோடி ஆகியோர் நவீன இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்துள்ளார். 

நான்கு குஜராத்திகளுக்கு பாராட்டு:

ஸ்ரீ டெல்லி குஜராத்தி சமாஜ் 125 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு அமித் ஷா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் மற்றும் நரேந்திர மோடி ஆகிய நான்கு குஜராத்திகளும் இந்தியாவின் நவீன வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

காந்திஜியின் முயற்சியால் நாடு சுதந்திரம் பெற்றது. சர்தார் படேல் காரணமாக நாடு ஒன்றுபட்டது. மொரார்ஜி தேசாயால் நாட்டின் ஜனநாயகம் புத்துயிர் பெற்றது. நரேந்திர மோடியால் இந்தியா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நான்கு குஜராத்திகளும் மகத்தான சாதனைகளைச் செய்து, ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர்" என்றார்.

ஒன்றுபட்டு வாழும் குஜராத்தி சமூகம்:

தாய் மொழியான குஜராத்தில் தொடர்ந்து பேசிய அவர், "குஜராத்தி சமூகம் நாடு கடந்து உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறது. எந்த சமூகமாக இருந்தாலும், அதனுடன் ஒன்றுபட்டு பணிபுரிகிறது. அதே சமயம் அதற்கு சேவை செய்கிறது. டெல்லியில் வசிக்கும் குஜராத்திகளை அவர்களின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்துடன் இணைத்து, நாடு மற்றும் சமூகத்தின் சேவையில் அவர்களை ஊக்குவிக்கும் பணியை இந்த அமைப்பு செய்துள்ளது.

125 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இந்த அமைப்பில் தொடர்புடைய அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
குஜராத்தி சமூகம் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. டெல்லியில் வசித்த போதிலும், குஜராத்தி சமூகம் குஜராத்தின் சாரத்தை பராமரித்து, அதன் கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாத்து, அதை முன்னெடுத்துச் சென்றுள்ளது.

ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் டெல்லியில் வசிக்கிறார்கள். குஜராத்தி சமூகமும் நகரத்தில் ஒழுங்கான முறையில் வாழ்ந்து வருகின்றனர்" என்றார்.

மோடியின் சாதனைகள்:

பிரதமராக மோடி, ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதை குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, "இந்த காலகட்டத்தில் நாடு பல சாதனைகளை படைத்துள்ளது. 2014இல் மோடி பிரதமரானபோது, ​​உலக அளவில் 11வது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரம், இன்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, உலகில் 5வது இடத்தில் உள்ளது.

இப்போது சர்வதேச நிதியம் உட்பட பல நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒரு பிரகாசமான இடமாக பார்க்கின்றன. மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, இந்தியாவின் எல்லையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்ற செய்தியை இந்தியா உலகிற்கு வழங்கியது.

130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டில், கோவிட் தடுப்பூசி இயக்கம் சுமூகமான முறையில் நடத்தப்பட்டது.
பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பாளராக மாறியுள்ளது. இந்தியா ஸ்டார்ட்அப் துறையில் மூன்றாவது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளது" என்றார்.

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget