மேலும் அறிய

மணிப்பூரில் என்னதான் நடக்கிறது? பிரதமர் மோடியை சந்தித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா..!

மணிப்பூரில் நிலவி வரும் சூழல் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் அமித் ஷா.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசும், மாநில அரசும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று விளக்கினார். ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து சென்ற பிரதமர், தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை இந்தியா திரும்பினார்.

மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

இதை தொடர்ந்து, மோடியை சந்தித்து அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக, மணிப்பூரில் நிலவி வரும் சூழல் குறித்து விளக்கம் அளிக்க, நேற்று, டெல்லிக்கு சென்ற அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங், அமித் ஷாவை சந்தித்து பேசினார். மாநில மற்றும் மத்திய அரசுகளால் வன்முறையை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்தது என பைரன் சிங் அமித் ஷாவிடம் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தது குறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட பைரன் சிங், "டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து, மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினேன். அமித் ஷாவின் தீவிர கண்காணிப்பின் கீழ், மாநில மற்றும் மத்திய அரசு கடந்த வாரத்தில் வன்முறையை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது" என பதிவிட்டார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஜூன் 13ஆம் தேதிக்குப் பிறகு வன்முறை காரணமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். அமைதியை அடைவதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துமாறு அமித் ஷா அறிவுறுத்தினார். 

அனைத்து கட்சி கூட்டம்:

மேலும், அமைதி நிலவுவதை உறுதிசெய்ய மணிப்பூரில் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் கோரினார். என்னுடன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித்ஸ்வராஜ், ராஜ்யசபா எம்பி மகாராஜா மற்றும் சபாநாயகர் சத்யபிரதா சிங் ஆகியோர் வந்திருந்தனர்" என்றார்.

அனைத்து கட்சி கூட்டத்தில், 18 அரசியல் கட்சிகள், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நான்கு எம்.பி.க்கள் மற்றும் இரண்டு முதலமைச்சர்கள் மூன்று மணி நேரம் நீடித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஆறு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சதிச் செயல் ஏதேனும் நடந்திருக்கிறதா? என்பதை ஆராய சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து ஒரு மாதமாக நடந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

இதுவரை கலவரம் தொடர்பாக மொத்தம், 3,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget