மேலும் அறிய

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எழுதிய கடிதத்தால் சர்ச்சை...மூத்த நீதிபதிகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடு...என்னதான் பிரச்னை?

இனி, உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் பணியிடங்களை லலித் தலைமையிலான கொலீஜியத்தால் பரிந்துரைக்க முடியாது.

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்கும்படி தற்போது தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித்தை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. 

விதியின்படி, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைத்தவுடன் தற்போதைய தலைமை நீதிபதியால் கொலீஜியம் கூட்டத்தை கூட்ட முடியாது. இதன் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் பணியிடங்களை லலித் தலைமையிலான கொலீஜியத்தால் பரிந்துரைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி லலித் நவம்பர் 8 ஆம் தேதி அன்று ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய். சந்திரசூட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அரிதிலும் அரிதான நிகழ்வாக, நீதிபதி நியமனம் குறித்து தலைமை நீதிபதியிடம் கேட்டு கொண்டதை மத்திய சட்டத்துறை அமைச்சகம் தகவலாக வெளியிட்டுள்ளது. பொதுவாக, இது தொடர்பாக தகவல் வெளியிடப்படாது.

புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்து லலித்திடம் அரசு கேட்டு கொண்ட நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் தலைமை நீதிபதி லலித்தால் இனி நியமனம் செய்ய முடியாது.

முன்னதாக, தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா இருந்தபோது, அவர் இரண்டு நீதிபதிகள் நியமிப்பதை தடுக்க, இதே விதியையே மேற்கோள் காட்டி இருந்தார் லலித்.

இச்சூழலில், உச்ச நீதிமன்றத்திற்கு நான்கு நீதிபதிகளை நியமனம் செய்வது தொடர்பாக லலித் எழுதிய கடிதம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவ காரணமாக அமைந்துள்ளது. நீதிபதிகள் சந்திரசூட், சஞ்சய் கிஷன் கவுல், கே.எம். ஜோசக் மற்றும் அப்துல் நசீருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி தங்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்து கேட்டதற்கு கொலீஜியம் உறுப்பினர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தங்களின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய முடியாது என்றும் ஒருமித்த கருத்தை உருவாக்க ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

"மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான நியமனம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் கடிதம் மூலம் செய்யப்படக்கூடாது" என லலித் எழுதிய கடிததற்கு நீதிபதிகள் பதில் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு நியமிப்பதற்காக மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆகிய நான்கு பேரையும் கொலீஜியம் பரிசீலிக்க இருந்தது. இருப்பினும், நீதிபதி சந்திரசூட் மாலை வரை நீதிமன்றத்தில் இருந்ததால், கொலீஜியம் குழுவை சந்திக்க முடியவில்லை. 

அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 1ஆம் தேதி, தசரா விடுமுறை காரணமாக உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு சென்றுவிட்டது. அக்டோபர் 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்படும். ஆனால், அதற்குள் தலைமை நீதிபதி லலித் ஓய்வு பெறுவதற்கான கால அவகாசம் ஒரு மாதத்திற்கு குறைவாக ஆகிவிட்டது.

நீதிபதி லலித்தின் கொலிஜியம் தனது குறுகிய 74 நாள் பதவிக்காலத்தில் ஒரு நீதிபதியின் பெயரை மட்டுமே அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
Embed widget