மேலும் அறிய

Amarnath Yatra 2023 Registration: அமர்நாத் யாத்திரை போக ஆசையா.. எங்கே, எப்படி பதிவு செய்ய வேண்டும்.. முழு விவரம் தருகிறது ஏபிபி நாடு

அமர்நாத் யாத்திரைக்கு செல்ல விரும்புபவர்கள் எங்கே, எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் அறியலாம்.

அமர்நாத் யாத்திரைக்கு செல்ல விரும்புபவர்கள் எங்கே, எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் அறியலாம். முன்னதாக, ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை புனித யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

துணை நிலை ஆளுநர் உறுதி:

தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் புனித யாத்திரை தொடர்பாக ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்தின் 44-வது ஆலோசனை கூட்டம், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ராஜ்பவனில் நடந்தது. அதன் முடிவில் நடப்பாண்டிற்கான அமர்நாத் யாத்திரையை, ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மனோஜ் சின்ஹா ”சுமுகமான அமர்நாத் யாத்திரைக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறியுள்ளனர். இந்த யாத்திரையில் பக்தர்களுக்கு மிகச் சிறந்த சுகாதார மற்றும் தங்குமிடம், மின்சாரம், பாதுகாப்பு ஆகிய அத்தியாவசிய வசதிகளை பெறுவர்” என உறுதியளித்தார்.

முன்பதிவு தொடக்கம்:

மொத்தம் 62 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு அமர்நாத் யாத்திரைக்கு இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாரெல்லாம் யாத்திரை செல்லலாம்?

அமர்நாத் யாத்திரை செல்ல விருப்பமுள்ளவர்கள்  www.jksasb.nic.in. எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். 13 வயது முதல் 70 வரையிலான எந்தவொரு தனிநபரும் இந்த யாத்திரியை மேற்கொள்ளலாம். அதேநேரம், 6 வாரம் மற்றும் அதை தாண்டிய கருவுற்ற பெண்கள் யாரும் யாத்திரை மேற்கொள்ள அனுமதி இல்லை. 

முன்பதிவு செய்வது எப்படி?

படி-1: மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் (SASB) அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்

படி-2: ”ஆன்லைன் சர்வீஸ்” எனும் ஆப்ஷனை தொட்டதும் திறக்கும் மூன்று ஆப்ஷன்களில் ”ரிஜிஸ்டர்” எனும் ஆப்ஷனை தொடவும்

படி-3: தற்போது புதிய பக்கத்திற்கு செல்லும்

படி-4: அங்கு தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

படி-5:  பயனாளரின் செல்போன் எண்ணிற்கு வரும் ”ஓடிபி” எண்ணை பதிவு செய்து முன்பதிவை உறுதி செய்யவும்

படிவு-6: மனு பரிசீலனை செய்யப்பட்டதும் பயனாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

படி-7: பயணத்திற்கான கட்டணத்தை செலுத்தவும்

படி-8: முன்பதிவு உறுதி செய்யப்பட்டதற்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

இந்த முன்பதிவானது பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்பிஐ, ஜம்மு & காஷ்மீர் வங்கி மற்றும் எஸ் பேங்க் ஆகிய வங்கிகளின் கிளைகளில் நாடு முழுவதும் செய்து தரப்படும். அதோடு, SASB எனும் செயலி மூலமாகவும் இந்த ஆன்லைன் முன்பதிவை மேற்கொள்ளலாம்.

கட்டண விவரம்:

குறிப்பிட்ட வங்கிகள் மூலமாக அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்ய 120 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதோடு,  யாத்திரைக்கு இந்தியர்களுக்கு 220 ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முன்பதிவு செய்ய 1,520 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.  

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Embed widget