மேலும் அறிய

2024-இல் பாஜகவை வீழ்த்த இதுதான் ஃபார்முலா...ரகசியம் சொல்லும் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ்..!

தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் யார், பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றுகிறார்களோ அவர்களே மத்தியல் ஆட்சி அமைத்து வருகின்றனர்.

கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பாஜக அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்:

தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.

மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது. அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது. 

இதனிடையே, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், பிகாரில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம், மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில், 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதில், முக்கியத்துவம் வாய்ந்தவர் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ்.

பாஜகவை வீழ்த்த பக்கா ஸ்கெட்ச்:

தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் யார், பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றுகிறார்களோ அவர்களே மத்தியல் ஆட்சி அமைத்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்டிருப்பதால்தான், உத்தர பிரதேசத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது பாஜக.

கடந்த முறையே, உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த பெரிய கூட்டணி அமைக்கப்பட்டது. எதிரிக்கட்சிகளாக திகழ்ந்த, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து 2019 தேர்தலை எதிர்கொண்டன. இருப்பினும், 80 தொகுதிகளில் 62 தொகுதிகளை வென்று பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இந்த முறை, பாஜகவை வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்பில் சமாஜ்வாதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அக்கட்சியின் தலைவர் அகிலேஷ், "பெரிய தேசியக் கட்சிகள் எங்களை ஆதரித்தால் உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோற்கடிக்கப்படும்" என்றார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், 2024இல் பாஜகவை எப்படி வீழ்த்துவது என்பது குறித்து தன்னுடைய ஃபார்முலாவை பகிர்ந்து கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியை (பாஜக தலைமையிலான கூட்டணி) பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர் தோற்கடிப்பர் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து பேசிய அவர், "தன்னுடைய ஃபார்முலா உத்தர பிரதேசத்திற்கு மட்டுமே. 80 தொகுதிகளிலும் தோற்கடித்தால் பாஜக அகற்றிவிடலாம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் எந்தக் கூட்டணிக் கட்சி வலுவாக இருக்கிறதோ அதைக் கருத்தில் கொண்டு தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் -  ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் - ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் -  ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் - ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
Embed widget