மேலும் அறிய

போலீஸ் சம்மன் வந்துச்சு; மகனுக்கு உடம்பு சரியில்லை.. நாளைக்கு ஆஜராவார்: சாக்கு சொன்ன அமைச்சர் அஜய் மிஸ்ரா

என் மகனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. நாளை ஆஜராகிவிடுவார் என்று கூறியுள்ளார்.

"என் மகனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. நாளை ஆஜராகிவிடுவார்" என்று அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் எனுமிடத்தில் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுக்கு போலீஸார் நேற்று சம்மன் அனுப்பினார்கள்.

ஆனால், அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை. இது குறித்து விளக்கமளித்துள்ள அஜய் மிஸ்ரா, என் மகனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. நாளை ஆஜராகிவிடுவார் என்று கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று, உத்தரப்பிரதேசம் கேரியில் ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் அஜய்மிஸ்ரா, துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதனால் அங்கு வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். அப்போது அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வந்ததாகக் கூறப்படும் கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர், பாஜகவினர் மூவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்றார். ஆனால் அவரை உபி போலீஸார் தடுத்து நிறுத்தினர். வாரண்ட் ஏதும் இல்லாமலேயே பிரியங்கா காந்தி 36 மணி நேரத்துக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவரும், அவரது சகோதரர் ராகுல் காந்தியும் இணைந்து லக்கிம்பூருக்குச் சென்று உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். இதற்கிடையில், உத்திரப்பிரதேச வழக்கறிஞர் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி உச்சநீதிமன்றம் லக்கிம்பூர் வழக்கு விசாரணையை ஏற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணன் தலைமையிலான அமர்வு, உத்திரப்பிரதேச சம்பவத்தில் கைது நடவடிக்கை என்ன உள்ளிட்ட விசாரணை அறிக்கையை கோரியது.

இந்நிலையில்தான் மாநில அரசு இருவரை கைது செய்தது. 8 பேர் கொண்ட காவல்படையை அமைத்தது. அத்துடன் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜராகவில்லை. மாறாக அவரது தந்தை மகனுக்கு லீவ் லெட்டர் போல் விளக்கமளித்துள்ளார். உத்தரப்பிரதேச வன்முறை தொடர்பாக இதுவரை பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எதுவும் தெரிவிக்கவில்லை. அஜய் மிஸ்ரா மட்டும் ஒருமுறை அமித்ஷாவை சந்தித்து வந்தார். உபி அரசு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
Embed widget